இலங்கை செய்திகள்

பிரதமர் ரணில் யாழ்ப்பாணம் செல்கிறார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார். வடக்கின் அபிவிருத்தித் திட்ட முன்னெடுப்புக்கள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு பிரதமர் இவ்வாறு நாளை மறுதினம் விஜயம் செய்ய உள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகங்களில் அபிவிருத்தி திட்ட செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

சிங்களப் பெயரை தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்த சி.வி

“ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெலபொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் […]

பொன்சேகா

பிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்! சரத் பொன்சேகா

பிரபாகரன் யுத்த வீரரா அல்லது பயங்கரவாதியா என்பது மக்களுக்குத் தெரியும் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சட்டங்களுக்கு அமையவே பயங்கரவாதி யார், படைவீரன் […]

Maithripala Sirisena

அழுத்தங்களை புறக்கணித்தே ஈரானுக்கு விஜயம் செய்தேன் – ஜனாதிபதி

கடந்த வாரம் தாம் ஈரானுக்கு மேற்கொண்ட விஜயத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் அதனை புறக்கணித்து தாம் அங்கு சென்றதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் ஈரானுக்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. எனினும், எங்கிருந்து தமக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி குறிப்பிடவில்லை என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்றபோதும் […]

கருணா

முள்ளிவாய்க்கால் நாளில் தலைமறைவான கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வினாயகமூர்த்தி முரளிதரன் கருணா கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியற்கட்சிகள் நேற்றைய தினம் நினைவுகூறப் பட்டன. அவ்வகையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டிலும் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கட்சியின் உப தலைவரும் மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜி.வசந்தராசா தலைமையில் கட்சி அலுவலகத்தில் […]

பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது! ஏன் என தெரியுமா?

”வீரச் தமிழச்சியை நாள் ஈழத்தில் பார்த்திருக்கின்றேன். அங்கு, மாவீரர் நாளில் விளக்கு ஏந்தி வருபவர்கள் கண் செத்துப் போய் விடும். துயில் கொள்ளும் இடம், அதைப் பார்த்தீர்களென்றால் கண்ணீர் வரும்” இவ்வாறு இயக்குநனர் பாரதிராஜா தெரிவித்தார். சென்னை பெருங்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று நடைபெற்ற, இன எழுச்சி அரசியல் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது. வேலு பிரபாகரன் ஈழத்தில் […]

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் இடைமறித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்களுக்கு இலங்கை படையினர் குளர்பானம் வழங்க முயற்சித்துள்ளனர். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய சைக்கிள் பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது குறித்த மாணவர்களை இடைமறித்த படையினர் அவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்க முற்பட்டுள்ளனர். […]

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு முதலமைச்சரின் விசேட அறிவிப்பு

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளை மறுதினம் வடக்கு கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை வடமாகாண சபை ஒழுங்கு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வடமாகாண முதலமைச்சர் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா […]

மன்னார் பேருந்து நிலையதிற்கு முன்பாக திடீர் என தீப்பற்றி எறிந்த முச்சக்கர வண்டி

இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் அரச பேருந்து நிலயத்திற்க்கு முன் திடீர் என தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று புதன் கிழமை(16) காலை 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது. […]

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகம் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது. ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் […]