இலங்கை செய்திகள்

நானும் – மகிந்தவும் தப்பியோடவில்லை பொன்சேகா

இறுதி யுத்தத்தின்போது நானோ முன்னாள் ஜனாதிபதியோ நாட்டை விட்டு இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச இராணுவ தளபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர் என ஜனாதிபதி சிறிசேன நியுயோக்கில் தெரிவித்துள்ள கருத்து குறித்து பதில் அளிக்கையிலேயே சரத்பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். யுத்தம் […]

குளிர்ந்து போன யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் வறட்சியடைந்த பிரதேசங்கள் குளிர்ச்சியடைந்தன. விவசாயிகள் நெல் விதைப்புக்காக மழையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளதால், அடுத்த கட்டமாக வயல்களை உழுது சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளம் தேங்கும் அளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகவில்லை எனினும், விவசாயிகளுக்கு நன்மை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தை நாளைக்கு ஒப்படைத்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்வோம்

நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான வழியைக் கூறுமாறு இந்த அரசாங்கம் தன்னிடம் கோருவதாகவும், எம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் தாம் அதனைச் செய்து காட்டுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசாங்கத்துக்கு நாளைக்கு வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றோம். நாம் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் […]

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கும் யோச னையை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத்­தில் முன்­வைக்­கக் கூடும் என்று தக­வல் வெளி­யா­கி­யி­ருந்­தது. அதற்கு வலுச் சேர்க்­கும் வகை­யில் பத்­தி ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான ஊட­கச் சந்­திப்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார். அரச தலை­வர் இத்­த­கைய யோச­னையை முன்­வைப்­ப­தற்கு கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் அர­சு­டன் இணங்­கிச் செல்­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் அரச […]

திருகோணமலையில் கடும் மோதல்? முப்படைகளும் களத்தில்!

திருகோணமலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா அரச படையினரும், நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் படையினரும், ஏராளமான கனரக ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் போர் பயிற்சி நடைபெற்றுள்ளது. தமிழீழவிடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தினர் தமது போர் உத்திகளை வெளிநாட்டுப் படையினருக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் கடந்த 2010 ஆம்ஆண்ட முதல் நடத்திவரும் “நீர்க்காகம்கூட்டு போர்ப் பயிற்சிகளின்” இறுதி நாள் ஒத்திகைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதால், ஆயிரக் […]

தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம்

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று புதன் கிழமை மன்னாரில் இடம் பெறவுள்ளது.மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், இன்று புதன் கிழமை காலை 10 மணிக்கு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் நடை பெறவுள்ளது. இவ் உணர்வு பூர்வமான நிகழ்வில் அனைத்து தமிழினவுனர்வாளர்களையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு தார்மீக தமிழுரிமையுடன் […]

அம்பலமான விக்னேஸ்வரனின் சுயரூபம்!

வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த முறை­யும் முத­ல­மைச்­சர் பதவி தொடர்­பா­கச் சிந்­திப்­பது தெரி­கின்­றது. அவ்­வா­றில்­லா­விட்­டால் கூட்­ட­மைப்­பின் தலைமை பதவி வில­கி­னால் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கள­மி­றங்­கு­வேன் என அவர் கூறி­யி­ருக்­க­மாட்­டார். கூட்­ட­மைப்­பை­யும் கூட்­ட­மைப்­பின் தலை­மை­யை­யும் தாக்­கிப்­பேசி வரு­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டுள்ள நிலை­யில் தற்­போது இத்­த­கைய கருத்தை அவர் வெளி­யிட்­டுள்­ளமை கவ­னத்­துக்­கு­ரி­யது. கூட்­ட­மைப்­பின் தலை­மை­யைப் பதவி வில­கி­வி­டு­மாறு அந்த அமைப்­பைச் சேர்ந்த எவ­ருமே கோரிக்கை விடுத்­த­தில்லை. […]

யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை

பன்னாட்டுத் தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான சிறப்பு நடமாடும் சேவை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் ‘கிராமத்திற்கான தகவல உரிமை’ எனும் தொனிப்பொருளில் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டது. நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜெயசுந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், […]

Gotabaya Rajapaksa

கோத்தாவின் பாதுகாப்புக்காக 70 படையினர் களத்தில்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக 42 விசேட அதிரடிப்படையினரும், 28 இராணுவச் சிப்பாய்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்‌ஷவைக் கொலை செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, அவரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தமிழ் ஊடகம் ஒன்றால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் […]

கடை­சி­யில் பழி தமி­ழர்­கள் மீதா?

இலங்­கை­யின் இனப் பிரச்­சினை தொடர்­பாக மங்­கள முன­சிங்க தலை­மை­யி­லான நாடா­ளு­மன்­றத் தெரி­வுக் குழு முன்­வைத்த யோச­னை­க­ளுக்கு அன்று தமிழ்க் கட்­சி­கள் இணங்­கி­யி­ருந்­தால் நாடு புதி­ய­தொரு வர­லாற்­றில் பய­ணித்­தி­ருக்­கும் என்று கூறி­யி­ருக்­கி­றார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. இட­து­சா­ரிக் கட்சி ஊடா­கத் தனது அர­சி­யல் பய­ணத்­தைத் தொடக்கி, சிறீ லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த தலை­வ­ராக வளர்ந்­த­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் இரா­ஜ­தந்­தி­ரி­யா­க­வும் இருந்­த­வ­ரு­மான மங்­கள முன­சிங்க தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் நடந்த அனு­தா­பத் […]