தமிழ்நாடு செய்திகள்

டெங்கு: ஒரே நாளில் 5 பேர் பலி!

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் இன்று ஒரே நாளில் இரண்டரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தருமபுரி ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரசுதன் டெங்கு காய்ச்சலால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல காய்ச்சலுக்கு ராமநாதபுரம் மாவட்டம் அரியனேந்தலில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. […]

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் கிடைக்குமா? அற்புதம்மாள் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது. ஒரு மாதம் கிடைத்த பரோல் கடந்த மாதமே முடிவடைந்தாலும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க முதல்வரிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் […]

மீண்டும் ஒலிக்கும் கருணாநிதியின் குரல் – திமுகவினர் ஆரவாரம்

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தன் காந்தக்குரலில் உரையாற்றுவார் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கோபால் தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்து வருகிறார். அந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். முரசொலி பவளவிழாவை […]

மெர்சலில் ஜிஎஸ்டி காட்சிகள் திடீர் நீக்கம்: இன்கம்டாக்ஸ் ரெய்டு பயமா?

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்கு ரிலீசுக்கு முன்பே பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி காட்சியால் மத்திய அரசின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் முரளிராமசாமி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி என்று கூறப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்கிவிடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் […]

கொதித்தெழுந்த எச்.ராஜா

ஜி.எஸ்.டி பற்றி மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீத ஜி.எஸ்.டி வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், அங்கே மருத்துவத்தை இலவசமாக தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. எனினும், இங்கு எல்லாவற்றையும் பணம் கொடுத்தே பெறுகிறோம் என மெர்சல் படத்தின் இறுதி காட்சியில் விஜய் வசனம் பேசியுள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மத்திய […]

​நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார்!

நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்துள்ள புகாரில், நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் சரியான ஆராய்ச்சி முடிவு வரும் வரை நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டாம் என தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்தால் டெங்கு காய்ச்சலுக்காக […]

டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகளுக்கு அபராதம்..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவன் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் லதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி கட்டிடங்களில் மழை நீர் தேங்கியிருந்ததால், பள்ளி நிர்வாகத்தை எச்சரித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல, நாமக்கல்லில் டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு வசதியாக தண்ணீர் தேங்கி கிடந்த இரண்டு […]

நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டாம்: நடிகர் கமல்!

நிலவேம்புக் குடிநீர் அருந்துவதால் மலட்டுத் தன்மை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க வேண்டாம் என ரசிகர் மன்றத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர் மன்றத்தினர் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இதர […]

கிருஷ்ணகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!

கிருஷ்ணகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஷ்வினி, கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாததால், கடந்த 11-ம் தேதி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் […]

​இரட்டை இலை விவகாரம்..

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான விசாரணையை வரும் 23ந்தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உருவான அணிகளால் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் ஒன்றாக இணைந்து இரட்டை இலையை மீட்க முயற்சித்து வரும் நிலையில், அதிமுக அம்மா அணியின் […]