மதுரை ஆதீன மடாதிபதியாக நித்தியானந்தா பொறுப்பேற்றது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293-வது ஆதீனமாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜெகதலப் பிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சட்ட […]
தமிழ்நாடு செய்திகள்
பாரதிராஜா விமர்சனத்துக்கு எச்.ராஜா பதிலடி!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஐயராக மாற நினைப்பதாக பிரபல இயக்குனர் பாரதிராஜா நேற்று விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விபூஷன் விருது அறிவித்தது. இதனையடுத்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று அவர் தலித் என்பதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது போல செய்தி வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிய அந்த பத்திரிக்கை மன்னிப்பு […]
தொடர் போராட்டங்களால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைப்பு
உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் மக்களின் தொடர் போராட்டங்களால் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. சரியான முன்னறிவிப்பின்றி, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் […]
புதிய காரில் பயணம் செய்த தந்தை மகன் பரிதாப பலி
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவரது மகன் பிரவீன் அருண் பிரசாத் (30), சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கார் வாங்க நினைத்த பிரவீன் நெல்லைக்கு சென்று புதிய காரை வாங்கிவிட்டு, தனது தந்தையுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார். கடையநல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவர் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் விருதுநகர்-மதுரை சாலையில் பட்டம்புத்தூர் விலக்கு […]
நாடு முழுவதும் முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து
இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் […]
பிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி
இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று குடியரது தினத்தை முன்னிட்டு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடா்பான செய்திகள் அனைத்தும் நாளிதழ்களிலும் வெளியாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிட்டுள்ளது. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த செய்தியை பார்த்து பொங்கி எழுந்த நடிகை கஸ்தூரி, அந்த […]
ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்
ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினா சென்னை மெரினா கடற்கரை சாலையில், காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கத்தை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு, வீர தீர செயல்கள் […]
பாஜகவை வீழ்த்த அவரே போதும்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு பெயர் போனவர். அவரது ஒவ்வொரு கருத்துமே அதிரடியாக இருக்கும். இதனால் அவரை சுற்றி எப்பவுமே பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் பாஜகவை வீழ்த்த அவரே போதும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். பாஜகவின் எச்.ராஜா ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து சர்ச்சைக்கு வித்திட்டார். திருமாவளவனை கடுமையாக விமர்சித்து நானும் ரவுடி தான் […]
விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்தார்
சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்த மேடையில் எச்.ராஜாவும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா இந்த விவகாரம் […]
பேராறிவாளன் திடீர் விடுதலை ?
அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக […]





