Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 35)

தமிழ்மாறன்

ஊழல்களை மறைக்கவே ராஜபக்சர்கள் தொழிற்சங்கங்களை தூண்டி விடுகின்றனர்

கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஊழல் முறைகேடு மோசடிகளில் ஈடுபட்டோரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளது. இவர்களை தற்பொழுது கைதுசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடும் எரிபொருள் ஊழியர்கள் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட …

Read More »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு: டிரம்ப் மருமகனிடம் எம்.பி.க்கள் விசாரணை

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அப்போது டிரம்புக்கு (தற்போதைய ஜனாதிபதி) ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவின் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி …

Read More »

சிரியா போராளிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்தது வீண்வேலை – டிரம்ப் பாய்ச்சல்

சிரியாவில் அதிபரின் ஆட்சிக்கு எதிராக இயங்கி வரும் போராளிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்தது ஆபத்தான வீண்வேலை என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது, சிரியா நாட்டின் தெற்கு பகுதியில் போர் பதற்றத்தை தணிப்பதற்கு செய்ய வேண்டிய சமாதான முயற்சிகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை …

Read More »

சாகலவுடனான கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை கைவிட்ட வைத்தியர் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல் அமைச்சர் சாகல ரட்ணாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் மாலை 4 மணியுடன் பணிப்பகிஷ்கரிப்பை வைவிடுவதாக அறிவித்துள்ளது. மருத்துவ பீடத்தின் செயற்பாட்டாளர் சங்கத்தின் செயற்பாட்டாளரான ரயன் ஜயலத்தை கைதுசெய்வதற்கு அரசு முன்னெடுத்த நடவடிக்கையை கண்டித்தே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில், அமைச்சர் சாலக ரட்ணாயக்கவுடனான கலந்துரையாடலில் பின்னர் கூடிய வைத்தியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பை நேற்றைய …

Read More »

நீதிபதி இளஞ்செழியன் மீதான படுகொலை முயற்சிக்கு த.வி.கூ. கண்டனம்

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக கண்டிப்பதாக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், தன்னுயிரை அர்ப்பணித்த பொலிஸ் அதிகாரியின் அகால மரணத்தால், துயருற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்துக்கு …

Read More »

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே குறித்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தின் மூலம் தொழிற்பேட்டை ஒன்று அமைவது மாத்திரமன்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது …

Read More »

இந்தியாவிலிருந்து பரவும் நுளம்புகளால் இலங்கைக்கு மீண்டும் மலேரியா : சத்தியலிங்கம்

மலேரியா நோய்க்கான காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கை பெருமை கொண்டிருந்தது. ஆனாலும் அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை …

Read More »

வவுனியா, இரட்டைப் பெரியகுளத்தில் விசமிகளால் மயானத்திற்கு தீ வைப்பு!

வவுனியா இரட்டைப் பெரியகுள மயானத்திற்கு விசமிகளால் இன்று (செவ்வாய்க்கிழமை) தீ வைக்கப்பட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதிக்கருகில் அமைந்துள்ள இரட்டைப் பெரியகுள மயானத்திற்கே இன்று மதியம் தீ வைக்கப்பட்டதில் மயானம் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இதனை அவதானித்த இரட்டைப் பெரியகுளப் பிரிவுப் பொலிஸார் வவுனியா நகரசபைத் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து உடன் விரைந்த நகரசபை தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அருகில் இருந்த …

Read More »

மலையகத்தில் வைத்திய சேவைகள் முடக்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாள் மலையகத்தில் வைத்திய சேவைகள் முடக்கம். வைத்திய பீட மாணவ செயற்குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தும், சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில …

Read More »

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதுதான் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வட, கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து வடக்கு,கிழக்கில் இன்று பல்வேறு தரப்பாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச்சந்தி பசுமை பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னாரிலும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த …

Read More »