டெல்லியில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கட்சி தலைவர் அமித் ஷா, கூட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதில், பா.ஜனதாவின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேசிய செயற்குழு கூட்டத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட […]
Author: குமார்
அமெரிக்காவைக் தொடர்ந்து ரஷியா, சீனா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு – காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 130 ஆண்டு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் தலைவர் பதவியை ஏற்க திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கடசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் தோல்வி ஏற்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். ராகுல் காந்திக்கு இந்தியாவில் சரியான இமேஜ் கிடைக்காமல் இருப்பது பெரும் குறையாக கருதப்படுகிறது. நேரு குடும்பத்துக்கு வாரிசு என்றாலும் அவர் முக்கிய விவாதங்களில் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளானது. […]
மியான்மரில் 28 இந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாக ராணுவம் கண்டுபிடித்தது
மியான்மரில் ராகின் மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் அங்கு வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. ரோகிங்யா தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் ராகின் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 4 லட்சத்து 30 ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காள தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கலவரம் நடந்த ராகின் மாகாணத்தில் 28 […]
பனாமா கேட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார்
கடந்த மாதம் லண்டன் சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை பாகிஸ்தான் திரும்பினார் பனாமா கேட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைஏற்று விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் படி நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரீப் மற்றும் […]
இந்தியாவில் ரூ.2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்
அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 3 இந்தியாவில் பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்போன் 3 மேக்ஸ் 5.5 (ZC553KL) மாடலின் விலை ரூ.2000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேதான் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் அசுஸ் பிரத்தியேக விற்பனையாளர்களிடம் கிடைக்கும் சென்போன் 3 மேக்ஸ் 5.5 (ZC553KL) டைட்டானியம் கிரே, […]
அட்லாண்டிக் கடலில் உருவாகிய மரியா புயல் வலுவிழந்து தென்கிழக்கு அமெரிக்க கரையை இன்று கடக்கும் என அறிவிப்பு
அட்லாண்டிக் கடலில் உருவாகிய மரியா புயல் கடந்த ஒரு வாரமாக கரீபியன் தீவுகளை சூறையாடிய நிலையில் நேற்று வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலில் கடந்த வாரம் உருவாகிய மரியா புயல், கரீபியன் கடல் பகுதியில் உள்ள அனைத்து தீவுகளிலும் பலத்த சேதத்தை உண்டாக்கியது. டொமினிகா, ப்யூர்டோ ரிகோ ஆகிய தீவுகளில் மிகுந்த பேரழிவை மரியா புயல் ஏற்படுத்தியது. ஒன்றாம் வகை புயல் என அறியப்பட்ட மரியா, தற்போது வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு
119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. இந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இந்த தேர்தலில், டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட […]
உலகின் மிக அதிகமான எடை கொண்ட எகிப்து பெண் எமான் அகமது அபுதாபியில் மரணம்
அபுதாபி மருத்துவமனையில் தன்னுடைய 37-வது பிறந்த நாளை கொண்டாடி ஒருவாரங்களுக்கு பின்னர் எமான் அகமது உயிரிழந்தார். எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ பகுதியை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது36). இவர் தனது 11 வயதில் பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கையானார். மேலும் யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் மிகவும் குண்டானார். சுமார் 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எமான் அகமதுவின் எடை 504 […]
ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனையில் நடந்தது என்ன? – அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி
முதல் – அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற […]
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் என்பது ஒரு அணு அளவு கூட இல்லை – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேலூர் கூட்டத்தில் தினகரன் பேசும் போது ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார். அதன்பிறகு தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஜீவனுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள்தான் இருக்கிறதே தவிர அது உண்மை கிடையாது. புரட்சித் தலைவி ஜெயலலிதா ஒரு முதல்-அமைச்சர். சிகிச்சை பெற்ற இடம் […]





