குஜராத் தேர்தல் முடிவை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்து இன்று இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது. 93 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 851 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர் இரண்டாம் கட்ட தேர்தலில் 2.20 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இரண்டாவது மற்றும் இறுதிகட்ட தேர்தலில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்புடன் உள்ளது இன்று பிரதமர் […]
Author: தமிழவன்
தமிழகத்தில் மீண்டும் கனமழை
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் சமீபத்தில் உருவான ஓக்கி புயல் காரணமாக, கன்னியாகுமாரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. கடலுக்கு சென்ற பல மீனவர்கள் மாயமானார்கள். பலரின் படகுகள் காற்றில் இழுத்து செல்லப்பட்டு அருகிலுள்ள மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். பலர் கடலில் மூழ்கி இறந்தனர். கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகாரம் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகார மண்டபம் இன்று இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியாகியுள்ளார். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் இன்று காலை 9.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அதில், ஒரு பெண் பலியாகி விட்டார் என செய்தி வெளியாகியுள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததாக […]
பெரிய பாண்டி பலியான விவகாரம்ரா: ஜஸ்தானில் குற்றவாளிகள் கைது?
தமிழக காவல்துறை அதிகாரி பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் குற்றவாளிகளை அந்த மாநில போலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொளத்தூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நாத்துராம்(25) மற்றும் தினேஷ் சவுத்திரி(17) ஆகிய இருவரையும் அதிகாலை 3 மணியளவில் […]
கூட்டமைப்பின் வெற்றியை யாராலும் அசைக்க முடியாது
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் தரமான – பொருத்தமான வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கும். கூட்டமைப்பின் வெற்றியை எவராலும் அசைக்க முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். “கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தற்போது வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் தெரிவில் இளையோருக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்கள் வேட்பாளர்கள் […]
விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு கடூழிய சிறை
கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று இந்த தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தது. இந்த குற்றவாளிகள் மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்தவா்கள் என தெரிவிக்கப்பட்டது. எட்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். தேடுதல் ஒன்றுக்காக மருத்துவர் உட்பட 7 […]
பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!
பாலியல் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்க செய்ய வேண்டும் என்று சபையில் நேற்றுக் கொந்தளித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இத்தகைய ஆசிரியர்களுக்கு உடனடியாகவே சாவுத் தண்டனை வழங்கப்பட்டுவிடும் என்று சக உறுப்பினர் புவனேஸ்வரனும் அதனை ஆமோதித்தார். வடக்கு மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் நேற்று இடம்பெற்றபோது, மாணவ, மாணவிகளைக் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்துவது குறித்துப் […]
கடன் சுமையில் இருந்து தப்புவதற்க்கு உங்கள் ராசி என்ன சொல்லுகிறது
மேஷம்:இவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ளத் துடிப்பவர்கள். அப்படியானால் பணம் என்று வரும்போது இவர்கள் அதிக நெருக்கடிகளுக்குத் தயாராயிருப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி, கடனை எளிதில் வசூலிப்பார்கள். திட்டமிட்டுச் சேமிப்பது இவர்களுக்குச் சற்று கடினமென்றாலும், இவர்கள் ஓரளவுக்கு அதை செய்யக் கூடியவர்கள். மேஷ ராசிக்காரர்கள் பெரும் கடன்களில் மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கப் படுகிறார்கள். ரிஷபம்:ரிஷப இராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருக்கும் அதே நேரம் உறுதி படைத்தவர்கள். பொதுவாகச் சிக்கனமாக இருக்கும் இவர்கள் […]
கள்ளக்காதல் விவகாரம் கணவனை கொன்ற மனைவி
ஆந்திராவில் கள்ளக்காதலனோடு வாழ்வதற்காக, கணவரை கொன்று விட்டு, காதலனுக்கு அறுவை சிகிச்சை செய்து கணவர் என நம்பை வைத்து நாடகமாடிய வழக்கில், ஒரு மட்டன் சூப் மூலம் உண்மை வெளிப்பட்டது தெரியவந்துள்ளது. சுவாதி ரெட்டி என்பவருக்கு சுதாகர் என்பவரோடு திருமணம் நடந்தது. ஆனால், இவருக்கு ராஜேஷ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால், தன் காதலரோடு வாழ வேண்டும் என முடிவெடுத்த சுவாதி, தனது கணவரை, காதலரோடு சேர்ந்து கொன்றுவிட்டு பின்னர் […]
அண்ணியை திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுவன்
அண்ணன் இறந்ததால் அவரது மணைவியை தம்பிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. ஆனால் திருமணம் ஆன 2 மணி நேரத்தில் அந்த சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் சந்தோஷ் தாஸ் என்பவருக்கும், ரூபி தேவி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் திடீரென சந்தோஷ் தாஸ் மரணமடைந்தார். சந்தோஷ் தாஸ் மரணமடைந்த பின்னர் அவரது […]





