தெலுங்கானா மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட வனப்பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கியிருப்பதாக அதிரடிப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப் படையினர் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அதிரடிப் படை போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை எதிர்பார்காத அதிரடிப்படையினர் சுதாரித்துக்கொண்டு, நக்சல்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர். […]
Author: தமிழவன்
கேரளாவில் கரை ஒதுங்கிய 40 உடல்கள்
கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 40 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரிக்கு சென்ற தமிழக […]
மாகாண சபையில் இடம்பெறுவது குடும்ப சண்டையே
மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகின்ற ஆலோசனைகளை அரச அதிகாரிகள் கேட்கவேண்டும். நாம் சபையில் போடுகின்ற சண்டை குடும்பச் சண்டையே அதற்காக அதிகாரிகள் உறுப்பினர்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் அமைச்சுக்கள் மீதான விவாதம் நேற்றையதினம் மாகாண சபையில் இடம்பெற்றது. இந்த அமர்வின் ஆரம்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: மாகாண […]
வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடு உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள் உயர் நீதிமன்றில் நேற்றுக் கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வழக்கு ஆவணங்களை உயர் நீதிமன்றப் பிரதிப் பதிவாளர் சட்டத்தரணி கிரிஷானி டி கோத்தகொடயிடம் நேற்றுக் கையளித்தனர். புங்குடுதீவு மாணவி […]
வாழைத்தோட்டத்தில் வாழைக்குலைகள் திருட்டு!
நீர்வேலி தெற்குப் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் 25க்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் திருடப்பட்டுள் ளன. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் வந்த திருடர்கள் குறித்த தோட்டத்துக்குள் நுழைந்து அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட கதலி வாழைக்குலைகளை களவாடிச் சென்றுள்ளனர். களவாடப்பட்ட வாழைக்குலைகளின் பெறுமதி 30ஆயிரம் ரூபாவுக்கு மேல் என செய்கையாளர்கள் தெரிவித்தனர். இந்தத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னரும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர். விவசாயிகளால் பயிரிடப்படும் விளை […]
பாடசாலைப் பேருந்தும் தொடருந்தும் விபத்து – 4 மாணவர்கள் பலி!!
Perpignan (Pyrénées-Orientales) நகரிற்கு ஆருகிலுள்ள Millas இல் TER தொடருந்தும் பாடசாலைப் பேருந்தும் விபத்திற்கு உள்ளாகி உள்ளன. இதில் நால்வர் கொல்லப்பட 24 பேர படுகாயமடைந்துள்ளனர் lieu-dit Los Palaus வீதி மட்டத் தொடருந்துக் கடவையில் இன்று மாலை 16 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது இந்த விபத்தில் கொல்லப்பட்ட நால்வரும் பாடசாலைப் பிள்ளைகள் ஆவார்கள். காயமடைந்த 24 பேரில் பலர் உயிராபத்தான நிலையில் உள்ளனர். உடனடியான ஒரு பெரும் […]
ஓகி புயலால் எத்தனை பேர் மாயம்?
ஒகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள, மீனவ அமைப்பினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் சார்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரிக்கு சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி […]
குக்கர் கடையில் வருமான வரித்துறை, பறக்கும் படை அதிரடி சோதனை: தினகரனுக்கு ஆப்பு?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். அவர் போட்டியிடும் குக்கர் சின்னம் தொகுதி முழுவதும் பிரபலமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் பெண்கள் குக்கருடன் வலம் வரும் காட்சியை பார்க்க முடிகிறது. இதனையடுத்து அருகில் உள்ள குக்கர் கடைகளில் தினகரன் தரப்பு டோக்கன் மூலம் வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கி வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வருமான வரித்துறையினரும், தேர்தல் ஆணைய பறக்கும் படையும் சேர்ந்து […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெரிய பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பெரியபாண்டியனின் உடலுக்கு […]
தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரின் அண்ணன் மகன் தீபக்கிடம் விசாரணை கமிஷன் தலைவர் ஆறுமுகசாமி இன்று விசாரணை நடத்தினார். ஜெ.வின் மரணம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதன் பின் நடவடிக்கையில் இறங்கிய ஆறுமுகசாமி ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, தீபக் உட்பட 60க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பினார். இதையடுத்து நேற்று […]





