Author: மலரவன்

அஜித் மகளின் அதிர்ச்சி செயல்…

நடிகர் அஜித்தின் மகள் தனது மாடர்ன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. என்னை அறிந்தால் படத்தில் வயதுக்கு மீறின ஒரு புரிதலோடு அஜித்திற்கு மகளாக நடித்து ஒரு இயல்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி மக்களிடமும், சினிமாவிலும் பிரபலமானவர் பேபி அனிகா. இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் போட்டு தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாய் வளம் வந்து கொண்டிருந்த அனிகா […]

நான் தீபாவளி கொண்டாடமாட்டேன்

அடுத்த வாரம் இந்தியாவே தீபாவளி கொண்டாடும், ஆனால் நடிகை ஓவியா கொண்டாடமாட்டாராம். அது ஏன் என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “எனக்கு எல்லா நாளுமே தீபாவளிதான், எல்லா நேரத்தையும் நான் கொண்டாடி கொண்டு தான் இருக்குறேன். ஒரு நாளை அதற்கென ஒதுக்கிவைத்து செய்வதில்லை” என ஓவியா தெரிவித்துள்ளார்.

அதுக்கு ஆசை இருக்கு ஆனால் தைரியம் இல்லையே

படம் இயக்கும் ஆசை உள்ளது ஆனால் அதற்கு தைரியம் இன்னும் வரவில்லை என்று நடிகை மது தெரிவித்துள்ளார். மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மது. ரோஜா படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியும் அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இது குறித்து மது பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 25 ஆண்டுகள் ரோஜா படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த […]

உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழப்பு …

உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி(46) என்ற பெண்ணுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார். கணவர் அழகேசன் அளித்த புகாரை அடுத்து கிழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23-ம் தேதி கீழ்பாக்கம் […]

தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்! வடக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கிறது பேராதரவு!!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை 18ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பில் மைத்திரி […]

ஜனாதிபதி

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கிறது சம்பந்தன் குழு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அனுமதி கேட்டுள்ளனர். எனினும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து சந்திப்புக்குரிய அழைப்பு இதுவரை வரவில்லை. உண்ணாவிரதக் கைதிகளுக்கு அரசு உடனடியாக உரிய பதிலை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் […]

விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகை

தெலுங்கிற்கு சென்று நடிக்கத் தொடங்கிய ரகுல் பிரீத் சிங் நடித்த பல படங்கள் ஹிட்டாக அமையவே, தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் அவர். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் நடித்து, தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ரகுல்பிரீத்சிங், தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் […]

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் பற்றி ராகுல்காந்தி உருக்கம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சடலத்தை கண்டு, தாம் மிகுந்த வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, அதில் பங்கேற்றவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பிரபாகரனின் சடலத்தை […]

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9 மணியளவில் யாழ். நகர் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் […]

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: முதல் 10 இடங்­க­ளுக்­குள் தமிழ் மாண­வர் இல்லை!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு தமிழ் மொழிமூலமான மாணவரும் இடம்பெறவில்லை என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ்மொழிமூலமான முதலிடத்தை யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பொஸ்கோ மாணவி அனந்திகா உதயகுமாரும், கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி மாணவி நிர்ஜா ரவீந்திரராஜாவும் 194 புள்ளிகளைப் பெற்று பகிர்ந்து கொண்டுள்ளனர். நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிரிசான் குமார் […]