Author: மலரவன்

நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டாம்: நடிகர் கமல்!

நிலவேம்புக் குடிநீர் அருந்துவதால் மலட்டுத் தன்மை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க வேண்டாம் என ரசிகர் மன்றத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர் மன்றத்தினர் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இதர […]

கர்ஜனை-க்காக த்ரிஷாவுக்கு கைகொடுத்த கார்த்தி

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’ காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை ‘பருத்தி வீரன்’ புகழ் […]

அஜித்துடன் ஓவியா

நடிகர் அஜித் நடிக்கும் படத்தில் என்ன வேடமாக இருந்தாலும் நான் நடிக்கத் தயார் என்று நடிகை ஓவியா தனது ரசிகர் மத்தியில் தெரிவித்துள்ளார். ஓவியா தான் இப்போது பல இளைஞர்களின் கனவுக் கன்னி. பிக்-பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டார் அவர் . தற்போது இவர் எந்த நிகழ்வுக்குச் சென்றாலும் அமோக வரவேற்பு கிடைக்கிறது. அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவரிடம் தல அஜித்துடன் […]

இன்றைய ராசிபலன் 19.10.2017

மேஷம்: சிரம சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பெண்கள் செலவில் சிக்கனம் பேணுவது நல்லது. நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். ரிஷபம்: மனதில் ஒருமுகத்தன்மையுடன் செயல்படுவீர்கள். நேர்மை மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். மிதுனம்: கடின பணிகளையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் […]

நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை – ஜெனிவாவில் சுமந்திரன்.

திரு.சுமந்திரனின் இன்றய பேச்சு அதிர்ச்சியை அளித்தது. இன்று ஸ்விஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ […]

இன்றைய நாளில் “புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம் மீது இலங்கை அரசின் வான்படை தாக்குதலில் சேதமடைந்த நாள் ஆகும்.

தமிழீழ விடுதலை போராட்டம் பல படிநிலைகளை கடந்து வளர்ச்சி பெற்ற ஒரு போராட்டம் ஆகும். தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகள் ஆற்றிய பங்கு வரலாற்றின் மாபெரும் பாய்ச்சலாக திகழ்ந்த ஒன்றாகும். ஆரம்பத்தில் கெரில்லா போராளிகளாக பின்பு தேசிய கட்டமைப்புகளாக ஒரு தேசிய இயக்கமாக நிழல் தேசத்தை இயக்கிய பொற்காலம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழர் நிலப்பரப்பில் பெரும்பகுதி மீட்கப்பட்ட காலங்களை கூறலாம். ஒரு போராட்டத்திற்கு ஆதரவாக […]

இன்றைய ராசிபலன் 18.10.2017

மேஷம் உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல – சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதலுக்கு உரியவர் வெறுத்தாலும் உங்கள் காதலைக் காட்டுங்கள். பார்ட்னர்ஷிப் திட்டங்கள் பாசிடிவ் ரிசல்ட்களைவிட அதிக பிரச்சினைகளையே ஏற்படுத்தும் – உங்களை சாதகமாக மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு உங்கள் […]

காலக்கெடு முடிஞ்சு போச்சு எமது நிலம் எமக்கு வேண்டும்

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, அந்தப் பகுதி மக்கள் இன்று காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினரின் வாக்குறுதிகள் பொய்யான நிலையில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். 15 நாட்கள் […]

விரைந்து பரவுகிறது டெங்கு வடக்கில் 7,000 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் இதுவரை 7 ஆயிரத்து 8 பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மாகாணத் திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 999 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும், 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மாவட்ட சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் பிரிவின் […]

உண்ணாவிரதக் கைதிகளை நேரில் பார்த்துக் கதறியழுதனர் உறவுகள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அவர்களது உறவுகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். உண்ணாவிரதக் கைதிகள் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் சிறைச்சலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நேற்று மாலை உறவுகள் பார்வையிட்டனர். கைதிகளைக் கண்டவுடன் அவர்களது உறவுகள் கதறி அழுதனர். கைதிகளும் விம்மி விம்மி அழுதனர். வவுனியா மேல்நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கை அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து […]