தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31ம் தேதி அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் முதல்கட்டமாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் வரை தனது ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் […]
Author: மலரவன்
4 கட்சிகளின் ஓட்டுக்களை கூட்டினால் கூட தினகரனை நெருங்க முடியலையே!
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று கடைசி நேரத்தில் கணிக்கப்பட்டதுதான். ஆனால் இந்த அளவுக்கு இமாலய வெற்றி பெறுவோம் என்று தினகரன் தரப்பினர்கள் கூட எதிர்பார்க்கவில்லை ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனன், கிட்டத்தட்ட தினகரன் பெற்ற வாக்குகளில் பாதியைத்தான் பெற்றுள்ளார். திமுகவோ டெபாசிட் இழந்துவிட்டது. வழக்கம் போல் எதிர்பார்த்தபடியே நாம் தமிழர் மற்றும் பாஜக கட்சிகள் 4 இலக்க எண்ணிக்கையில் ஓட்டுக்களை பெற்று தேறாத […]
இதுவரை 200 பேர் பலி
சமீபத்தில் தமிழகம், கேரளாவை தாக்கிய ஓகி புயலை அடுத்து டெம்பின் என்ற புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை மிக கோரமாக தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு இப்போது வரை 200 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானவ் மாகாணத்தில் டெம்பின் புயல் நேற்று ருத்ரதாண்டவம் ஆடியது. புயல் மற்றும் இடைவிடாத கனமழையால் அந்நாட்டின் […]
சன்னிலியோனின் முதல் தமிழ்ப்பட டைட்டில் என்ன தெரியுமா?
ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன், முதன்முதலில் தமிழில் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகவுள்ளது வடிவுடையான் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் வரும் 27ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக சன்னிலியோனுக்கு நயன்தாராவுக்கு […]
இரட்டை இலையில் வெற்றி பெற்ற மூவர் தினகரனுக்கு ஆதரவு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்தே பெரும் ஆதரவு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனிடம் இருந்து பிரிந்து சென்ற அதிமுக எம்பி செங்குட்டுவன் தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லக்கூடும் பலர் தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி […]
தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த விஷால்
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற தினகரனின் அணிக்கு அதிமுகவின் பல தலைவர்கள் வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனை உறுதி செய்வதை போல் வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனை நேரில் சந்தித்து ஆதர்வு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தினகரனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் […]
தினகரன் வெற்றியால் தமிழக மக்கள் அதிர்ச்சி: ஓபிஎஸ் அறிக்கை
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே மைனாரிட்டி அரசு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஆளும் கட்சி என்ற அதிகாரம், இரட்டை இலை, ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு, வலுவான வேட்பாளர் ஆகியவை இருந்தும் தினகரன் பெற்ற வாக்குகளில் இருந்து பாதி வாக்குகளைத்தான் அதிமுக பெற்றுள்ளது. இந்த நிலையில் தினகரனின் வெற்றி குறித்து துணண முதல்வர் ஓபிஎஸ் தனது […]
போருக்கு அடிக்கற்கள்: வடகொரியா பகிரங்க மிரட்டல்!!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியா சமீபத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது. வட கொரியா மீதான புதிய தடைகள்: # வட கொரியாவின் பெட்ரோலிய […]
ஆர்.கே.நகரில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி…
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40, 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28,234 வேட்பாளர்களில் 1,76,885 பேர் வாக்களித்தனர். அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது. அதன் வாக்கு எண்ணிக்கை சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் […]
தேசத்தை ஆளும் கட்சிக்கு நோடாவுடன் தேர்தல் போட்டி: சு.சுவாமி நக்கல் ட்விட்!!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. தற்போது வரை 4 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் மின்னிலையில் உள்ளார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெருவார். 2019 […]





