Author: மலரவன்

இரட்டை இலையில் வெற்றி பெற்ற மூவர் தினகரனுக்கு ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்தே பெரும் ஆதரவு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனிடம் இருந்து பிரிந்து சென்ற அதிமுக எம்பி செங்குட்டுவன் தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லக்கூடும் பலர் தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி […]

தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த விஷால்

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற தினகரனின் அணிக்கு அதிமுகவின் பல தலைவர்கள் வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனை உறுதி செய்வதை போல் வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனை நேரில் சந்தித்து ஆதர்வு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தினகரனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் […]

தினகரன் வெற்றியால் தமிழக மக்கள் அதிர்ச்சி: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே மைனாரிட்டி அரசு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஆளும் கட்சி என்ற அதிகாரம், இரட்டை இலை, ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு, வலுவான வேட்பாளர் ஆகியவை இருந்தும் தினகரன் பெற்ற வாக்குகளில் இருந்து பாதி வாக்குகளைத்தான் அதிமுக பெற்றுள்ளது. இந்த நிலையில் தினகரனின் வெற்றி குறித்து துணண முதல்வர் ஓபிஎஸ் தனது […]

கிம் ஜாங் நம் கொலை தொடர்பாக

போருக்கு அடிக்கற்கள்: வடகொரியா பகிரங்க மிரட்டல்!!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியா சமீபத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது. வட கொரியா மீதான புதிய தடைகள்: # வட கொரியாவின் பெட்ரோலிய […]

ஆர்.கே.நகரில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி…">

ஆர்.கே.நகரில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி…

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40, 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28,234 வேட்பாளர்களில் 1,76,885 பேர் வாக்களித்தனர். அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது. அதன் வாக்கு எண்ணிக்கை சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் […]

தேசத்தை ஆளும் கட்சிக்கு நோடாவுடன் தேர்தல் போட்டி: சு.சுவாமி நக்கல் ட்விட்!!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. தற்போது வரை 4 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் மின்னிலையில் உள்ளார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெருவார். 2019 […]

நடந்தது தேர்தலா?

ஆர்.கே.நகரில் நடந்தது தேர்தேல இல்லை என்றும் எல்லாம் பணத்திற்காக விழுந்த வாக்குகள் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். ஆர்.கே.நகரில் ஆர்.கே.நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 5வது கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதவிட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் கூறியதாவது:- பாஜக பின்னிலையில் […]

2018 உள்ளூராட்சி சபை தேர்தல் : உங்கள் ஆதரவு யாருக்கு?

2018 உள்ளூராட்சி சபை தேர்தல் : உங்கள் ஆதரவு யாருக்கு? கண்டிப்பா உங்களோட வாக்கை பதிவு பண்ணுங்க..!! [poll id=”6″]

இர­ணை­ம­டுக் குளத்­தின் துரு­சுக்­க­தவு சீர­மைப்பு!!

இர­ணை­ம­டுக் குளத்­தின் வாய்க்­கா­லில் வீழ்ந்த நீர்ப்­பா­சன துரு­சுக் கதவு சீர­மைக்­கப்­பட்­டுள்­ளது. மாவட்ட நீர்ப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ள­ரின் முயற்­சி­யி­னால் கதவு தற்­போது சீர்­செய்­யப்­பட்­டுள்­ளது – என விவ­சா­யி­கள் சம்­மே­ள­னத்­தி­னர் தெரி­வித்­த­னர். குளத்­தின் இட­து­கரை வாய்க்­கா­லின் துரு­சுக் கத­வு­கள் இரண்­டில் ஓர் கத­வா­னது கடந்த 20 தினங்­க­ளுக்கு முன்­னர் கழன்று வாய்க்­கா­லுக்­குள் வீழ்ந்­தது. அவ்­வாறு வீழ்ந்த கதவை மீட்டு சீர்­செய்­வ­தற்கு 15 நாள்க­ளாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் ஒற்­றைக் கத­வின் மூலமே தண்ணீர் […]

பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியன் வழக்கை தீவிரமாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் பாலி மாவட்ட காவல்துறை அதிகாரி பார்கவி, ‘பெரியபாண்டியனின் உடலை துளைத்தது சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு’ என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, ‘பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் […]