மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ரிஷபம்: கடந்த இரண்டு இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். தடைப்பட்ட வேலைகளை […]
Author: மலரவன்
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அவர் சபாஷ் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காந்திருந்து, காத்திருந்து 20 வருடங்களுக்கு பின்னர் அது நடந்திருக்கிறது. பல்வேறு கால கட்டங்களில் அரசியல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவிய ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை […]
கதாநாயகியாக அறிமுகமாகும் ஜூலி!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமானார். அண்மையில் அப்பளம் விளம்பர படம் ஒன்றில் நடித்தார். இந்நிலையில் தற்போது முதல்முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஜூலியும் 4 […]
பிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட அறிவிப்பு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் அறிக்கையை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை
உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்தித்த அரசியல் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த விசாரணை கமிஷன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக […]
முரசொலி இணையதளம் முடக்கம்
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முரசொலி பத்திரிக்கை திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. திமுகவின் முரசொலி பத்திரிக்கை கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முரசொலி நாளிதழின் பவள விழாவில் கருணாநிதியின் புத்தகங்கள், புகைப்படங்களின் தொகுப்பு, மெழுகு சிலை என கண்காட்சிக்கு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் முரசொலி நாளிதழின் இணையதளம் இன்று […]
மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.!
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக்கூற வேண்டும். மத்திய வங்கி பிணைமுறி ஊழல்வாதி களுக்கு சட்டத்தின் மூலமாக அதியுச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன வலியுறுத்தினார். 2020 இல் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கும் பயணம் இந்த ஆண்டில் இருந்து ஆரம்பிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் […]
துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.!
மலரும் புத்தாண்டு சிறந்த நோக்கங்களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டினை முன்னிட்டு அவர்விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட கால மக்கள் எதிர்பார்ப்புக்களை வெற்றி கொண்டு நாம் பெற்றுக் கொண்ட சமூக, அரசியல் சுதந்திரத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும் முக்கிய பணியை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திய நிலையிலேயே 2018 ஆம் ஆண்டு பிறக்கிறது. நல்லாட்சி […]
ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் ஓராண்டாக தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களும் பெரும் அவமானம் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலில் இறங்குகிறேன் என்று […]
கணவனைப் பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிற்கு நடந்த சோகம்
கணவனைப் பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்மணியை கொலை செய்த மூன்று ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கரூரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பர்வீன் பானு. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பர்வீன் பானு கடந்த 2015 ஆம் ஆண்டு மாயமாகி உள்ளார். இதனையடுத்து இளையராஜா தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீஸார் பர்வீனின் தொலைபேசி அழைப்புகளைக் […]





