வடக்கு, கிழக்கில் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன அறிவித்துள்ளன. யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரை காலமும் காத்திருந்த உறவுகளுக்குத் தற்போதைய அரசும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. எனவே, அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் […]
Author: பார்த்தீபன்
ஹர்த்தாலை ஆதரிப்பது நமது கடமை! – மாவை எம்.பி. தெரிவிப்பு
காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் நாளை வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “இராணுவத்தை எதிர்த்துப் போராடிய இளையோர், குடும்பஸ்தர்கள் ஆயிரக்கணக்கில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இராணுவம் சரணடையுமாறு பகிரங்கமாக அறிவித்தது. போர்க் காலத்தில் அவ்வாறான போராளிகளும் பொதுமக்களும்கூட இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் கைதுசெய்த […]
வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்! – துரைரெட்ணசிங்கம் எம்.பி. கோரிக்கை
வடக்கு, கிழக்கில் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும், இந்தப் போராட்டத்தை அரசு கண்டுகொள்வதாக இல்லை. எனவே, அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்தும், எமது உறவுகளின் […]
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? – வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கின்றது பேராதரவு!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. அத்துடன், ஏனைய சகல தரப்புகளையும் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் அவை கோரியுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த இரண்டு மாத காலத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற […]
ஆஸியிலிருந்து இலங்கை வந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சித்திரவதை!
ஆஸ்திரேலியாவிலிருந்து சமீபத்தில் இலங்கை வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஆஸ்திரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை வந்த வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை […]
வடக்கு, கிழக்கு ஹர்த்தால்: அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அழைப்பு […]
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் வியாழனன்று ஹர்த்தால்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாத்திரமல்லாது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல்போனவர்களின் தெளிவான வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய […]
சிவனொளிபாதமலையில் ‘ஓம் நமசிவாய’வுக்குத் தடை: முழுமையான விசாரணை கோரி அரசுக்கு இந்து குருக்கள் அமைப்பு கடிதம்
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்து பக்தர்களுக்கு, நந்திக் கொடியை ஏந்த வேண்டாம் என்றும், சிவனுக்குரிய கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியம் ஜனாதிபதி, பிரதமர், இந்துசமய விவகார அமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பவுள்ளது. தமது ஒன்றியத்தின் சட்டஆலோசகர் ஊடாக இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது என்றும், இது விடயத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டது கவலையளிக்கின்றது […]
13 வயது சிறுமி கூட்டு வல்லுறவு! – தாய், தாத்தா, மாமா பொலிஸாரிடம் சிக்கினர்
பதின்மூன்று வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுமியின் தாத்தாவும், இராணுவ சிப்பாயாக இருந்துவரும் மாமாவும் தனமல்வில பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இப்பாலியல் வல்லுறவுக்கு உடந்தையாக இருந்தவர் என்று கருதப்படும் சிறுமியின் தாயாரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், தாயின் இரண்டாவது கணவனும் இந்தச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். தனமல்வில பகுதியின் உஸ்ஸகல என்ற கிராமத்தில், மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சிறுமியை, சிறுமியின் தாத்தா தொடர்ச்சியாகப் […]
வாட்டி வதைக்கிறது வறட்சி! 9 இலட்சம் பேர் பரிதவிப்பு!! – வடக்கிலேயே அதிக பாதிப்பு
நாட்டில் தொடரும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலையங்களும் வற்றிப்போயுள்ளன. இதனால் பலமைல் தூரம் நடத்து சென்றே நீரைப் பெறவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், சிறுதானியச் செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகளுக்கும் […]





