Author: அருள்

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் வெடிபொருள்கள் வெடிப்பு!!

முல்லைத்தீவு, இரட்டைவாய்க்காலில் இன்று மாலை வெடிபொருள்கள் வெடித்ததால் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இனந்தெரியாதவர்களால் மூட்டப்பட்ட தீயால் போரில் கைவிடப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்தன என்று கூறப்படுகின்றது. புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படாது காணப்படுகின்றன என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.

வெற்றி, தோல்வியின்றி நிறைவுற்ற மூன்றாவது டெஸ்ட்

இலங்கை – இந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி இனிங்ஸில், 410 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி விளையாடியது. ஐந்து விக்கட்களை இழந்து 299 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் போட்டி நிறைவுபெற்றது. இலங்கை அணியின் அறிமுக வீரர் ரோஷன் சில்வா 154 பந்துகளில் 74 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 72 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றிருந்த […]

இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?

இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள்  அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக  உலகில் பல்வேறு நாடுகளில் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.12.2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். […]

இன்றைய ராசிபலன் 05.12.2017

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். முகப்பொலிவுக்கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். […]

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் […]

ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நல்லாட்சி

ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை இல்லாதொழித்துள்ள  எமது நல்லாட்சி அரசாங்கம், தற்போது அந்நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் ஊடக அமைச்சு, யுனெஸ்கோ மற்றும் அரசாங்க தகவல் திணைக்களங்கள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அடக்கு முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற போதே அவர் […]