Author: அருள்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தார் ட்ரம்ப்!

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து மத்திய கிழக்கில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன. “இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்” என, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அறிவித்தார். இவ்வறிவிப்பின் மூலம் ஜெருசலேமை உரிமை கோரிய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் ஏழு தசாப்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். அறிவிப்புடன் நின்றுவிடாத ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் […]

கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு

கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன. மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலகம் இன்று வியாழக்கிழமை (07.12.2017) நடவடிக்கையை […]

தொடரும் வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்.!

ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் […]

இந்தியாவில் நிலநடுக்கம் !

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று இரவு 8.45 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் பரவலான நிலநடுக்கம் பதிவாகியுள்ள அதேவேளை, இந்தியாவின் தலைநகரான டில்லியிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது ரிசடடர் அளவுகோலில் 5.5 என பதிவாகியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய-மத்தியதரை நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவல்களின் படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் டெஹ்ராடூனுக்கு […]

இன்றைய ராசிபலன் 07.12.2017

மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு […]

வெளியேறினார் லட்சுமி!

செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறுவது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷண் ஜீ. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வருகிறார். குடும்பத்தில் உள்ள பிரச்சினை, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்களுக்கு தன்னுடைய அறிவுரைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் வழங்குகிறார். இதில் அவர் பேசும் ‘என்னம்மா […]

பியருக்குச் சண்டை- குடும்பத்தலைவர் கொலை!

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றின் போது ஒருவர், பியர் மதுபான போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நாவலப்பிட்டி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று முற்பகல் இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம்  பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.