தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான 46 வயதுடைய சாந்தரூபன் தங்கலிங்கம் நாளை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய சாந்தரூபனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் தற்போது குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். சாந்தரூபனை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது, அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஐ.நா அகதிகள் ஆணையம் அவுஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா, சாந்தரூபனை […]
Author: அருள்
இன்று உலகமே கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமான் அன்று தாயுடன் நடுரோட்டில் நின்றது தெரியுமா?
இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான். அந்த அளவிற்கு அனைவரையும் தனது இசையினால் கட்டிப்போட்டுள்ளார். ஆனால் இந்த இடத்தினை அடைவதற்கு இவர் கடந்து வந்த பாதைகள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறுவயதில் தந்தையை இழந்த இவர் பல கஷ்டங்களை கடந்துள்ளார். பள்ளிப்பருவமான 10ம் வகுப்பு முடித்ததும் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குச் சென்றார். அதன்பின்பு சில நாட்களுக்கு கழித்து 11ம் வகுப்பில் […]
இன்றைய ராசிபலன் 21.02.2018
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக […]
ஆபத்தில் சிக்கியுள்ள மைத்திரி! காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி சதிவலைகள் பின்னப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆபத்தான கட்டத்திலிருக்கும் ஜனாதிபதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவித்துள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிங்கள ஊடக தலைவர், அவரது ஊடகம், ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தாமரை மொட்டு குழுவினால் சமகால ஜனாதிபதி மீது கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான […]
கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! ஒன்று திரண்ட மக்களும் அரசியல் பிரமுகர்களும்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை விடுவித்து தருமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று ஒரு வருடத்தை கடந்துள்ளது. இதை முன்னிட்டே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், […]
மஹிந்தவின் கடும் எச்சரிக்கை! சம்பந்தனுக்கு ஆபத்து
நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டதொடரின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எதிர்க்கட்சி தலைமை பதவியை கோருகின்றோம். ரணில் தான் பிரதமராக இருப்பார் என நான் நினைக்கின்றேன். அது ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உள்ள கொடுக்கல் வாங்கலாகும். ஸ்ரீலங்கா […]
விடுதலை புலிகள் இல்லாததால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பேராபத்து! பழநெடுமாறன்
2009ஆம் அண்டு மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தார்கள். ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று சொன்னார்களே தவிற ஆயுதங்களை கீழே வைக்கின்றோம் என்று கூறவில்லை. என பழநெடுமாறன் தெரிவித்தார். மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் […]
ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்படுவார்கள்! மகிந்த அணி தெரிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த சில தினங்களாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஜனாதிபதியின் பலவீனம் காரணமாக சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக” […]
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய வேண்டுகோள்
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இவ்வாராம் நிறைவடையவுள்ளன. பாடசாலையின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைகின்றது. தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அறிவித்தல் விடுத்துள்ளார்.
நெடுந்தீவில் ஈபிடிபிக்கு ஆப்பு! கூட்டமைப்பின் நகர்த்தல்
ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு சுற்றுப்பேச்சுகள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. 6 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் […]





