Author: அருள்
பிக்பாஸில் இருந்து எலிமினேட்டான பின்பும் ஐஸ்வர்யாவை வெச்சி செஞ்சிருக்கும் பொன்னம்பலம்!
பிக்பாஸ் 2வது சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதிலிருந்து ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி வெளியேற்றப்பட்டவர் தான் வில்லன் நடிகர் பொன்னம்பலம். அவர் இருக்கும் போதே ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு பயங்கர கலாட்டா செய்தார். அதனால் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காத நபர்களில் ஒருவர் பொன்னம்பலமும் தான். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டையானது சர்வ சாதாரணமாக நடைப்பெறும். ஆனால் மிகப்பெரிய சண்டையாவதற்குள் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டு விட்டார். […]
யாழ் வீதியில் பொலிஸாருக்கு ஏற்பட்ட பரிதாபம்
யாழ். மணியந்தோட்டம் பகுதியில் சற்று முன்னர் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவை வாட்டியெடுக்கும் வறட்சி! மக்கள் கடும் அவதி
வவுனியாவில் நிலவும் வறட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செட்டிகுளம் பிரதேச செயலக மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களை சேர்ந்த 5160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. த்துடன் வவுனியா தெற்கு பிரதேச செயலக […]
இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி
கம்பகா – படுவத்தவில் இராணுவத்தின் இரகசிய முகாம் இருந்தது தமக்குத் தெரியும் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தகவல்களை வெளியிட மறுக்கிறார் […]
இன்றைய ராசிபலன் 29.08.2018
மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடனைத்தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச் சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். […]
மீண்டும் எலிமினேஷனில் இருந்து தப்பிய யாஷிகா, ஐஸ்வர்யா
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹத்திற்கு வந்த போன் கால்! உண்மைகளை கசியவிட்ட பிரபலம்
பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் மஹத் வெளியேறினார். பொது மேடையில் அவர் மக்களிடம் தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டார். கமல்ஹாசனும் அவருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவருக்கு போன் செய்து திட்டியுள்ளாராம் NSK.ரம்யா. இவரும் இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறியவர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வகையில் ரம்யா வெளியிட்டுள்ள வீடியோவில் மஹத்தை நான் போன் செய்து திட்டினேன். அவன் மீது […]
முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு கேட்டு போராடும் விஜயகலா
கல்விச் சான்றிதழ்கள் இன்மையால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. […]
நல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 12ஆம் நாள் திருவிழா அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வள்ளி – தெய்வானை கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்தனர். இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தி முருகப்பெருமானின் அருள் பெற்றுச் சென்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு […]





