எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதற்கான இலாபத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த […]
Author: அருள்
ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் சந்திரிகா!!
கொழும்பு அரசியல் நாளுக்கு நாள் பரபரப்படைந்துவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் களமிறங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஜனாதிபதியாக்கிய சமரில் முக்கிய வகிபாகத்தை வகித்த சந்திரிகா, தற்போது மீண்டும் களமிறங்கியிருப்பது முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவோர் பிரதமர் என்ற நிலை இருக்கும்போது, மைத்திரி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் சந்திரிகா இரகசியப் […]
இன்றைய ராசிபலன் 31.10.2018
மேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை […]
இயக்குனர் சங்கத்தில் இருந்து முருகதாஸ் நீக்கம்?
சர்கார் திரைப்படத்தின் கதை இயக்குனர் முருகதாஸ் கதை அல்ல இணை இயக்குனர் வருண் ராஜேந்திரனுடையது என கூறி படத்தை வெளியிடக்கூடாது என கூறப்பட்டிருந்த நிலையில் இந்த பிரச்சனை முடிந்து படம் சொன்னபடி வெளியாகவுள்ளது. மேலும், வருணுக்கு இழப்பு தொகை வழங்கப்பட்டதோடு, படத்தில் அவரது பெயரும் போடப்படும் என கூறப்பட்டுள்ளது. முருகதாஸும் சர்கார் கதை என்னுடையது, கதையின் கரு மட்டும் ஒன்றாக இருந்துள்ளது என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், […]
தப்பு கணக்கு போட்ட மோடி; திமிரிய ரிசர்வ் வங்கி ஆளுநர்
மத்திய அரசு சமீபத்தில் சிபிஐ விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கு நடந்து வந்த பனிப்போர் தற்போது வெளியே தெரிய துவங்கியுள்ளது. ஆம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிவருவதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உரிய சுதந்திரத்தை வழங்குவதில்லை என்ர குற்றச்சாட்டி இருந்து வந்தது. கடந்த ஆண்டு வட்டி […]
இலங்கையின் ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
அமெரிக்கா டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி 175 ரூபாய் 56 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயின் பெறுமதி, நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கு பிராந்திய நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்வி பிரிவின் […]
மைத்திரிக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தநிலையில் சபாநாயகர் இவ்வாறு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு […]
நீதிமன்றத்தின் திடீர் அறிவிப்பால் ரணிலிற்கு பேரிடி
தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதமரான மகிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ள முதலாவது கைது உத்தரவு!!
பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், தொடர்புடையவர் எந்தப் பதவியில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெற்றோலிய வளங்கள் அமைச்சராகப் பணியாற்றிய அர்ஜூன ரணதுங்க இன்று மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தெமட்டகொட பெற்றோலியக் […]
மைத்திரி மீது ரணில் கடுமையான சீற்றம்
நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அனுமதிக்காதமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறு தெரிவித்தமை பாரதூரமான குற்றம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அனைத்தையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறேன் என்றும் அவர் கூறினார். புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் தீர்மானம் குறித்தும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே […]





