Sunday , June 29 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / உணவு சாப்பிட துரித உணவகம் முன்பு அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானி

உணவு சாப்பிட துரித உணவகம் முன்பு அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார்.

இச்சம்பவம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் நடந்தது. உணவக வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அதில் இருந்து இறங்கிய விமானி நெய்யினால் தயாரிக்கப்பட்ட பர்கர் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கினார். கடை ஊழியர்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு ஹெலிகாப்டரில் ஏறி பறந்து விட்டார்.

முன்னதாக அவரிடம் உங்கள் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘ டான்’ என் ஸ்டைலாக கூறிய அவர் கையசைத்தபடி புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன்பு மெக்டொனால்ட் நிறுவனம் முன்பு தான் நிறுத்தியிருந்த ஹெலிகாப்டருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். வீடியோவும் எடுக்கப்பட்டு சமூகவலை தளங்களில் அது வெளியிடப்பட்டது.

அவரிடம் ஒரு ரேடியோவில் பேட்டி கேட்கப்பட்டது. அப்போது உணவகத்தில் ஹெலிகாப்டரை தரை இறக்க நிறுவனத்திடம் அனுமதி பெற்றேன் என்றும் கூறினார்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …