தண்ணீருக்கடியில் ‘மாயன்’ காலத்து நீளமான குகை கண்டுபிடிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிமு 2600ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த கணிதம் மற்றும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்றவர்களான மாயன்கள் என்று உலகம் முழுவதும் நம்பப்படும் நிலையில் மாயன்கள் காலத்திய நீருக்கடியில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான குகை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த குகையின் நீளம் 216 மைல்கல் ஆகும். மெக்சிகோ நாட்டின் கடற்கரையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தற்செயலாக இந்த அதிசய குகையை கண்டுபிடித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பின்னரும் நீருக்கடியில் உள்ள இந்த குகை புத்தம் புதியதாக இருப்பதாகவும், இதில் மர்மங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மெக்சிகோ அரசின் அனுமதி கிடைத்தால் இந்த குகை முழுவதையும் சல்லடை போட்டு ஆராய்ச்சி செய்ய தயார் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குகையை ஆராய்ந்தால் மாயா நாகரித்தின் பல மர்மங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *