ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒப்பந்தம் இல்லாமல் புதுப்பிக்க முயன்றால், அது மற்றொரு பேரழிவு தரும் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி திறன்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களுக்கு முன்பு ஈரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





