ரஜினி ஆதாரவாளர்கள் என யாரும் இல்லை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தனிநபர் யாரையும் ரஜினி ரசிகர் என்று குறிப்பிட வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் ரஜினி அரசியல் குறித்து பல விவாதங்கள் நடைபெற்றது.

இதில் ரஜினி ஆதரவாளர் சிலர் கலந்துக்கொண்டு பேசினர். இந்நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகி இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வேண்டுக்கோள் விடுத்து அறிக்கை ஒன்ரை வெளியிட்டுள்ளார். அதில்,

சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்று சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமிக்கவில்லை.

மன்றத்தின் உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். தலைவர் ரஜினிகாந்த் பெயரில் அனுமதிக்கப்படாத யாரும் இந்த விவாதத்தில் பங்கேற்பது முறையல்ல என்பதால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ரஜினி ஆதரவாளர் என யாரையும் சித்தரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *