நாளை அவுஸ்ரேலியா பறக்கிறார் மைத்திரி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

நாளை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் ஜனாதிபதி முதலில் கன்பரா செல்வார்.

நாளைமறுதினம் 24ஆம்திகதி கன்பரா சென்றடையும் அவர், அவுஸ்ரேலியத் தலைவர்களைச் சந்தித்து விட்டு இரவு அங்கு தங்குவார்.

அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல் மற்றும் ஆளுனர் சேர் பீற்றர் கொஷ்குரோவ் உள்ளிட்டோரைச் சந்திக்கும் ஜனாதிபதி, மறுநாள் சிட்னி செல்வார்.

அங்கு பல்வேறு சந்திப்புகளை நடத்தும் அவர் அன்றிரவு அங்கு தங்குவார். வெள்ளிக்கிழமை அங்கிருந்து இலங்கைக்குப் புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர் அஜித் பெரேரா ஆகியோரும் அவுஸ்ரேலியா செல்லவுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *