Tag: விமல் வீரவன்ச

விமலுக்கு பிணை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு 87 நாட்களுக்குப் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது. அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பல முறை பிணை கோரியிருந்த போதிலும் அவருக்கான பிணையை வழங்க நீதிமன்றம் […]

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு காணப்படுவதாக குறிப்பிடும் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அதனை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பிலான தீர்மானமானது வேறு எவரும் கொண்டுவந்த ஒரு தீர்மானமல்ல எனவும், ஸ்ரீலங்காவின் அனுசரணையுடனேயே அது கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று […]

உண்ணாவிரதத்தை கைவிட்ட விமல் வீரவன்ச

சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கூறினார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டடுள்ளார். பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.