Thursday , April 25 2024
Home / Tag Archives: ஸ்ரீலங்கா அரசாங்கம்

Tag Archives: ஸ்ரீலங்கா அரசாங்கம்

உண்மை கண்டறியும் ஆணைக்குழு விரைவில் அமைக்கப்படும்; ஹர்ஷ டி சில்வா

ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் என்று ஸ்ரீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் ஒரு இலகுவான செயற்பாடு அல்ல எனக் குறிப்பிட்ட அவர், இனவாதிகள் மற்றும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுபவர்களின் தடைகளைத் தாண்டி, இதனை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு வேகமாக நல்லிணக்கத்தை அடைய முடியுமோ அந்தளவுக்கு வேகமாக தாம் நகர்ந்து …

Read More »

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஐ.நாவே கால அவகாசத்தைக் கொடுத்து சாட்சியங்கள் அழிந்து போக துணை நிற்காதே எனத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஐ.நா வே …

Read More »

இறுதி யுத்தத்தில் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை

இறுதி யுத்தத்தில்

இறுதி யுத்தத்தில் எவரும் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் எவரும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் எவையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிராமங்களிலுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயரே தெரியாது, அவ்வாறான நிலையில் எவ்வாறு இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி அவரிடமே தங்கள் குடும்பத்தவர்கள் சரணடைந்தனர் …

Read More »

இனப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா தோல்வி

இனப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல்

இனப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா தோல்வி தமிழ் சமூகத்தையும் சர்வதேச சமூகத்தையும் பிரித்தாலும் தந்திரத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் கையாள்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நிழல் அமைச்சரவையின் நிதியமைச்சர் ஜோன் மக்டொனல்ட் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் பிரச்சினை தொடர்பான மாநாடு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அவர், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் உள்ளக விசாரணையை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளமையை …

Read More »

யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம்

யுத்தக் குற்ற விவகாரம்

யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சட்டவிலக்களிப்பை வழங்குவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பிடிவாதமாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2016/2017 ஆம் ஆண்டுக்கான 159 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மனித உரிமை விடயங்கள் குறித்த சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் …

Read More »

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை …

Read More »