பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து …
Read More »விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகிறார் : சுமந்திரன் குற்றச்சாட்டு
வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என்பதற்கு புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரினால் வடக்கு மாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “முதலமைச்சர் இலங்கைத் தமிழரசு கட்சியுடன் ஆலோசிக்காமல் செயற்படுவதாக முதலமைச்சர் சி.வி.க்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் …
Read More »என்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் – சீ.வி.விக்னேஷ்வரன்
என்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் – சீ.வி.விக்னேஷ்வரன் வழக்கமான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் தன்னுடைய வீட்டில் தங்கியிருப்பதாகவும், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும் தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம். எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமது ஊடக இணைப்பாளர் ஊடாக குரல் பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார். இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்கள் தொடர்பாக வைத்தியர்கள் தன்னை பரிசோதிக்க உள்ளதாகவும், அதனை …
Read More »