அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் …
Read More »மன்னார் பேருந்து நிலையதிற்கு முன்பாக திடீர் என தீப்பற்றி எறிந்த முச்சக்கர வண்டி
இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் அரச பேருந்து நிலயத்திற்க்கு முன் திடீர் என தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று புதன் கிழமை(16) காலை 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது. …
Read More »மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகம் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது. ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் …
Read More »மன்னார் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு
வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பணவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பணவுகளை வழங்க கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மன்னார் …
Read More »மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் பல மீட்பு
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து –மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று திங்கட்கிழமை(26) காலை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் …
Read More »சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக கைவிட்ட வர்த்தகர்கள் கௌரவிப்பு-(படம்)
பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை கிராமத்திற்கு உற்பட்ட சுமார் 13 வர்த்தக நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக முன் வந்து கைவிட்டுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று(25) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக வங்காலை பொது சுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்… பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை பிரதேசத்திற்கு உற்பட்ட …
Read More »மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமனம்-(படம்) -மன்னார் நிருபர்-
மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமனம் மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை பாப்பரசர் அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை இன்று புதன் கிழமை(22) மாலை 4.30 மணியளவில் விசேட அறிவித்தலை வழங்கியுள்ளார். -மன்னார் புனித …
Read More »மன்னார் மாவட்ட கடல் உணவு ஏற்றுமதி தொடர்பில் விழிப்புணர்வு
மன்னார் நகரப்பகுதில் 2015 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் நோய், தொற்றுகிருமிகள் காணப்படுவதன் காரணமாக நெருப்புக்காச்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு அறிக்கைகளின் படி தெரிய வந்துள்ளதாக தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மன்னார் மீன்பிடித்திணைக்கள கேட்போர் கூடத்தில் தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனத்தினால் இன்று சனிக்கிழமை மதியம் இடம் …
Read More »வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 டெங்கு நோயாளர்கள்
வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தினை அடுத்து வீதியோரங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவுடன் நகரசபை ஊழியர்கள் …
Read More »தாயக மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆதரவு
தாயக மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆதரவு படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு-பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அனாதைகளாக்கப்பட்டிருக்கும் பாடசாலை சிறார்கள் தமது உரிமைகளை பறிகொடுத்த நிலையில் இன்று நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ள நிலையில், இம்மக்களின் போராட்டம் …
Read More »