Sunday , June 29 2025
Home / Tag Archives: பொது எதிரணி

Tag Archives: பொது எதிரணி

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற பொது எதிரணி புதிய திட்டமிடல் குழுவொன்றை நியமித்துள்ளது. பொது எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழுவொன்றே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கெதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற ஆதரவு திரட்டுவதற்காக கூட்டு எதிர்கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புடன் பேச்சுகளை …

Read More »

ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பு: முறியடிக்க பொது எதிரணி வியூகம்! – தேசிய கூட்டணி அமைக்க மஹிந்த ஒப்புதல்

புதிய அரசமைப்பு தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே அரசின் திட்டமாக இருப்பதால் அந்த முயற்சியை தோற்கடிப்பதற்காக தேசிய கூட்டணியொன்றை அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் கூட்டு எதிரணியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்ற …

Read More »

ராஜிதவுக்கு எதிரான பிரேரணை வலுவிழப்பு!

சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்ட ரீதியாக வலுவிழந்த ஒரு பிரேரணையாகக் காணப்படுகின்றது என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கடந்த வியாழக்கிழமை ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா …

Read More »

மஹிந்தவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தும்வரை போராட்டம் தொடரும்! – பொது எதிரணி கூறுகின்றது 

“இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும்தான்” என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளும் செயற்பாடே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடந்துள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் …

Read More »

‘மூதேவி ஆட்சி’க்கு ஆண்டுகள் இரண்டு! – மஹிந்த அணி கொழும்பில் நாளை போராட்டம்

தேசிய அரசின் இரண்டாண்டுப் பூர்த்தியை இலங்கைக்கு மூதேவி பிடித்த  நாளாகப்  பிரகடனப்படுத்தி கொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியை மஹிந்த அணியான பொது எதிரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பு லிப்டன் சந்தியில் நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொது எதிரணி மும்முரமாக செய்து வருகின்றது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு …

Read More »

ரணிலை வாழ்த்தும் விசேட அமர்வு மஹிந்த அணியால் புறக்கணிப்பு! – மூத்த அமைச்சர்கள் கடும் கண்டனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி தொடர்ச்சியாக 40 வருட கால சேவையைப் பூர்த்திசெய்தமைக்காக வாழ்த்துத் தெரிவிக்கும்வகையில் நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வை பொது எதிரணியான மஹிந்த அணியும், ஜே.வி.பியும் புறக்கணித்தன. நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர், பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணையை முன்வைத்து சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றினார். …

Read More »

புதிய அரசமைப்பு உருவாவதைத் தடுக்க மஹிந்த அணியினர் இருமுனைத் தாக்குதல்!   

மகிந்த

புதிய அரசமைப்பொன்றை  இயற்றும் தேசிய அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இருமுனைத் தாக்குதலை நடத்துவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம்  கூடினர். கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம்,  வெளிநாட்டுப் பிரமுகர்களில் இலங்கைப் …

Read More »