கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக விடுமுறை பெறுவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன் தான் பிரத்தியேகமான பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வைக் காண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் …
Read More »மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கம் பேச முடியாது: நஸீர் அஹமட்
மக்களின் மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கத்தினைப் பேச முடியாது என கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடா்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்னுமொரு இனத்தினை நசுக்கும் விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கும் மக்களால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. அதேவேளை ஒரு சிலரின் …
Read More »நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் : கிழக்கு முதல்வர்
கிழக்கு மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் மத்திய அரசாங்கம் கையாளும் பாரபட்சப் போக்கினால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்களை எதிர் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மத்திய அரசினால் ஒதுக்கப்படவேண்டிய நிதி வழங்கப்படாமையினால் மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பொதுவான பின்னடைவுகள் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”வருடத்தின் அரையாண்டும் கடந்து விட்ட போதிலும் …
Read More »கிழக்கு ஆளுநர் நியமனம் இன ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும்: முதலமைச்சர் நஸீர்
நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல கிழக்கு மாகாணத்திலும் இன முறுகலை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ள கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கின் புதிய ஆளுநர் நியமனமானது இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வழிவகுக்குமென நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கிழக்கின் …
Read More »நல்லாட்சியின் நகர்விற்கு மஹிந்த முட்டுக்கட்டை: கிழக்கு முதலமைச்சர்
நல்லாட்சியின் நகர்விற்கு மஹிந்த முட்டுக்கட்டை: கிழக்கு முதலமைச்சர் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வை நோக்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையிலான நல்லாட்சியின் நகர்விற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூரில் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரை பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) …
Read More »