தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை இருந்தால் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நல்லாட்சியிடம் கூறி நிறுத்திக் காட்டுங்கள் என முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சவால் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய கல்குடா – கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாங்கள் ஆட்சியிலிருந்தபோது புதிய மதுபானசாலைகள் …
Read More »அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை
அர்ஜுன மகேந்திரனிடம் விசாரணை இலங்கை மத்திய வங்கியில் பிணை, முறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம்இன்றைய தினம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த மோசடி சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு இன்றைய தினம் சமூகமளிக்குமாறு கடந்த 8ஆம் திகதி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் …
Read More »நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு: ஜனாதிபதி
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு: ஜனாதிபதி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேஷியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் …
Read More »