Tag: தலதா அத்துகோரள

ராஜபக்ஷக்களின் ‘பைல்’களை தூசு தட்டத் தயாராகிறது அரசு! – சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விசேட அறிக்கை கோருகிறார் புதிய நீதி அமைச்சர்

துரித விசாரணைகளின்றி நீண்டகாலமாக தேங்கிக் கிடக்கும் ராஜபக்ஷக்களின் விசாரணைக் கோவைகள் தொடர்பில் தமக்கு விசேட அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்குமாறு புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. மேற்படி விசாரணைக் கோவைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கும், இவற்றுக்கு எதிராக ஏன் சட்ட ஏற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுகின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகவுமே நீதி அமைச்சர் விசேட அறிக்கையைக் கோரியுள்ளார் என உயர்மட்ட அதிகாரியொருவர் […]

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளியோம்! – புதிய நீதி அமைச்சரும் விடாப்பிடி 

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். அத்துடன், கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல்,மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏன் ஸ்தம்பிதமடைந்துள்ளன என்பதை தான் ஆராய்வார் என்றும் அவர் கூறினார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தலதா அத்துகோரள நேற்று தனது கடமைகளை நீதி அமைச்சில் வைத்து […]