Tag: தமிழக அரசு

ஸ்டெர்லைட் போராட்டம் ; தமிழக அரசே பொறுப்பு : ரஜினிகாந்த் கண்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லை ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இந்நிலையில், […]

தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் – வைகோ பேட்டி (வீடியோ)

காவிரிக்காக அனைத்து கட்சிகளும் போராடி வரும் நிலையில் மத்திய அரசிற்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயண துறையின் முதலீட்டு மண்டலமாக்க 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை மத்திய அரசிற்கு கொடுத்தது பச்சைத்துரோகம் என வைகோ பேட்டியளித்துள்ளார். கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., தமிழகத்தில் […]

தொடர் போராட்டங்களால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைப்பு

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் மக்களின் தொடர் போராட்டங்களால் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. சரியான முன்னறிவிப்பின்றி, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் […]

பஸ் கட்டண உயர்வு ஏன்?

தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்து 509 பஸ்கள் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 615 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. மக்கள் நலனை கருதி மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், மலைப்பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களுக்கும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் […]

முதல்வர் சசிகலா

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’

விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டுமென சசிகலாவுக்கு ‘கெடு’ விதித்து சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 சிகிச்சைப் பெற்று, கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியதால், அவரது மருத்துவமனையின் சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகளும், அதிமுக தொண்டர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து […]

ஜெயலலிதா மர்ம மரணம் ?

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சுமார் 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தற்போது விசாரணையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன்படி, ஜெயலலிதாவின் […]

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - நடிகர் ராதாரவி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – நடிகர் ராதாரவி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – நடிகர் ராதாரவி ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் வந்துள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார். வாணியம்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் […]