விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு “ஐங்கரன்” என்ற நாமம் விளங்குகின்றது. அவரை “பஞ்சகிருத்திகள்” என்றும் கூறுவர். அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் (சுளகு) போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன. வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு “பாசஞானத்தையும்” இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்” உணர்த்துவதாக உள்ளன. …
Read More »