ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம் ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஏமாற்றி விட்டார். அதுவரை நாம் ஐ.தே.கவை நம்பியது உண்மைதான் என்று தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (10) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், …
Read More »முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர். அமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை. இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு …
Read More »கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்
கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு கடிதம் விமானப்படையினர் வசமுள்ள கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாண சபையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பதனால் அவற்றை அடிப்படையாக கொண்டு காணிகளை …
Read More »