“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள தமது கட்சி, தமிழ் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுப்பதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றது” என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா அம்மான் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒக்டோபர் முதல் வாரத்தில் விடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், ஆட்சிமாற்றத்தின் …
Read More »பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லை – கோட்டாபய ராஜபக்ஷ
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென வெளியான செய்தி உண்மையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் குறித்து பலவாறான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ள கோட்டா, அதன் காரணமாகவே அவர் உயிருடன் உள்ளாரென தெரிவிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். …
Read More »தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை இல்லை : கருணா அம்மான்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை இருந்தால் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நல்லாட்சியிடம் கூறி நிறுத்திக் காட்டுங்கள் என முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சவால் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய கல்குடா – கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாங்கள் ஆட்சியிலிருந்தபோது புதிய மதுபானசாலைகள் …
Read More »பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ் கட்டளையிட்டார் – கருணா
பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ் கட்டளையிட்டார் – கருணா நம்பிக்கையிழந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்யுமாறு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பிரபாகரன் இந்தியா சென்று, போரில் ஈடுபடுவதில்லை என சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு உறுதியளித்திருந்தார். எனினும், அக்காலப்பகுதியில் குறித்த ஒப்பந்தத்தினை மீறி, சீனன்குடா பகுதியில் …
Read More »கருணாவை கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபர் கைது?
கருணாவை கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபர் கைது? மஹிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சகோதர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் எனவும், மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுக்கு …
Read More »