ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஜெனிவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. […]





