சனிப்பெயர்ச்சி காரணமாக கடலுக்கு அடியில் உள்ள பூமி விலகுவதால் இந்தியா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் கடல் கொந்தளிக்கும் எனவும் சுனாமி வரும் எனவும், இந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும் எனவும் பண்டிதர் பச்சை ராஜென் கணித்துள்ளார். சனிப்பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. வரும் 19-ஆம் தேதி செவ்வாய் கிழமை விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சன பகவான் இடம் பெயர்கிறார். நீர் ராசியில் இருந்து நெருப்பு …
Read More »அத்துமீறி தாக்குதல் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியா 1300 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 52 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும் 175 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், “ காஷ்மீர் மக்களின் மீது இந்திய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் …
Read More »இந்தியாவில், முதல் முறையாக போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவில் முதல் முறையாக சுகோய் போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. கூட்டுத் தயாரிப்பு இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்காக மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் பல்வேறு வித ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் ரஷியாவின் என்.பி.ஓ. மசினோஸ்ட்ரேயெனியா கழகத்துடன் இணைந்து பிரமோஸ் அதிவேக (சூப்பர்சோனிக்) என்னும் நவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணை சோதனை …
Read More »சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் மீண்டும் ரோடு போடும் பணியை சீனா மீண்டும் தொடக்கம்
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லையில் சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பீடபூமி உள்ளது. இதற்கு சீனாவும், பூடானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதற்கு பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி சாலை அமைக்க முயன்றது. அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் …
Read More »இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு
இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து தலைமையில் நேற்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
Read More »முதல்வருக்கு அமோக வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி
விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Read More »டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநரின் ஆண்டு சம்பளம்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா) டி.வி. நரேந்திரனின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.8.17 கோடியாக இருக்கிறது.
Read More »நேரடி பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பதற்றத்தை தணிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப் பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு …
Read More »பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் – பிரதமர்
பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வு வழங்குவதில் யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள சவாலான பணி பற்றி கொழும்பில் இன்று ஆரம்பமான செயலமர்வில் பிரதமர் உரையாற்றினார்;. பாகிஸ்தான், இந்தியா உட்பட பிராந்தியத்தின் சில இடங்களில ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். …
Read More »காணாமல்போன படையினர் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டுமாம்! – மஹிந்த அணியின் கோரிக்கை இது .
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அலுவலகம் அமைக்கப்படுமாக இருந்தால் காணாமல்போன படையினர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மஹிந்த அணி கூறியுள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம அரசிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாம் இன்று யுத்தத்தையும், யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷவையும் மறந்துவிட்டே பேசிக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசு இவ்வளவு தூரமேனும் பயணிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் யுத்தம் முடிவுக்குக் …
Read More »