Tag: இந்தியப் பெருங்கடல்

காலி கடற்படைத் தளத்தில் நெதர்லாந்தின் ஆயுதக்களஞ்சியம்

இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் தமது நாட்டுக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை, நெதர்லாந்து அரசாங்கம் காலி கடற்படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கவுள்ளது. சிறிலங்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் வகையில், தமது நாட்டுக் கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்காவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் நெதர்லாந்து கையெழுத்திடவுள்ளது. சிறிலங்காவின் காலி துறைமுகத்தில் […]

இந்தியப் பெருங்கடல் மீது கவனம் செலுத்தும் ஜேர்மனி – தூதுவர்களுக்கான கூட்டம் சிறிலங்காவில்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை, புதிய மூலோபாய மற்றும் இராஜதந்திர முன்னுரிமைக்குரிய பகுதியாக கருதி, ஜேர்மனி தனது நாட்டு தூதுவர்களுக்கான கூட்டம் ஒன்றை முதல் முறையாக சிறிலங்காவில் ஒழுங்கு செய்துள்ளது. இன்று இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஜேர்மனியின் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிராந்தியத்தை வடிவமைப்பதில் உலகளாவிய போட்டி நிலவுகிறது. பெர்லின் ஒரு பிரதான வணிக சக்தி என்ற வகையில், இந்தியப் பெருங்கடலில் உறுதிப்பாட்டையும், சட்டத்தையும் உறுதிப்படுத்துவதில் ஆர்வம் […]