இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த மண்டபத்தை விசேட அதிரடி படையினர் பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நகரசபை வாயில் மற்றும் நகரசபை மண்டபத்தில் பாதுகாப்பு அதிரடி படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »கொழும்பில் அதிரடியாக களமிறங்கிய அதிரடி படையினர்…..
இரு வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளஎதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் ரத்கம நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடிபடையினர் களமிறகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சம்பவ இடத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதேச மக்களினால் காலை 10 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக காலி கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Read More »