எதிர்வரும் ஐந்தாம் ஆறாம் திகதி வானிலை அறிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தற்போது தெற்கு அந்தமான் தீவிற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் அதிகரித்து மத்திய வங்காள விரிகுடா ஊடாக இந்தியாவிற்குள் நுழைவதை காணமுடியும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இது இலங்கையின் கிழக்கு திசையில் நாட்டுக்கு அருகில் பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் இதன் பயணப்பாதை மாற்றமடையலாம் என்பதுடன், இதன் புதிய நிலை தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *