மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள

மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ்வே தெரிவித்துவந்தார்.

என்றாலும் இந்த 30/1 பிரேரணை மூலம்தான் மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லாமல் தடுத்தோம். அதபோன்று வெளிநாட்டு விசாரணையாளர்கள் எமது நாட்டுக்கு தேவையில்லை, எங்களால் விசாரணை மேற்கொள்ள முடியும் என எங்களுக்கு  ஜெனிவாவுக்கு தெரிவிக்க முடியுமாகியது.

அத்துடன் எமது பிரச்சினைகளில் இருந்து சர்வதேசத்தை தூரமாக்கியதுடன் சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு செல்ல முடியுமாகியது. உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் இந்த 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும். அதனால் அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 30/1 பிரேரணையில் இருந்து விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்கவேண்டும் என்றார்.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News