உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்வரை பதவியை பறிக்க முடியாது: கீதா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள கீதா குமாரசிங்க, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் அடிப்படையில் இரட்டை குடியுரிமை உள்ள ஒருவர் இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது எனத் தெரிவித்த அவர், நியாயத்தை எதிர்பார்த்து செயற்பட இன்னும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, அரசியல் அமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளதால் கீதா குமாரசிங்க, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (புதன்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுவிட்ஸர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ள கீதா, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்க தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டு, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *