யாழ் .பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நாளை மீள திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த பீடங்களை சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினத்திற்குள் தமது விடுதிகளுக்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ்.

பல்கலைக்கழக மாணவர்களால் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்ததையடுத்து பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் கடந்த 31ம் திகதி முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *