கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த! அரச தலைவர் தேர்தலுக்கான பொதுமக்கள் முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நாளை அறிவிக்கவுள்ளார் என்று ராஜபக்சவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோத்தபாய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார். கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள பொதுமக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில், அரச தலைவர் […]
Other News
முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதின் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து கொக்குளாய் முல்லைத்தீவு வீதியில் சிலாவத்தை பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. புத்தளம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் விபத்தில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய ராசிபலன் 10.08.2019
இன்றைய ராசிபலன் 10.08.2019 மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்துப் போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ரிஷபம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் […]
Comali Official Trailer | Jayam Ravi, Kajal Aggarwal | Hiphop Tamizha
Comali Official Trailer | Jayam Ravi, Kajal Aggarwal | Hiphop Tamizha A completely new experience with #Comali! Make way for a stellar treat from #JayamRavi! With a complete make-over and a fun story this is a ride you would thoroughly enjoy! Directed by Pradeep Ranganathan, this #HiphopTamizha musical releases on […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொறுப்பை ஏற்கின்றது அரசு
உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றது. பாரதூரமான இந்த விடயத்தில் இருந்து ஓடிவிட முடியாது. இவ்வாறு தெரிவித்தார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்றுச் சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- எனக்குச் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மூலமும், இராணுவத்தின் மூலமும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான தகவல்கள் […]
செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்!
செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்! ஆதியும் அந்தம் இல்லா அரும்பெரும் மதமாக மேன்மையுறும் இந்து மதம் தனின் வழிபாட்டு முறைமைகளில் இந்து மக்களால் தவறாது கடைப்பிடிக்கப்படுபவை விரதங்கள் ஆகும். விரதம் என்பது எம் மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவன் திருவருளை பெற்றுக் கொள்வதற்கு நாம் இயற்றும் ஒரு வழிபாட்டு முறையாகும். இத்தகு விரதங்கள் பல எம் இந்து மதத்தவரால் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒவ்வொரு கடவுளுக்கு என்று பல விரதங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் […]
41 பேரின் வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய ராசிபலன் 09.08.2019
இன்றைய ராசிபலன் 09.08.2019 மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப் பட்டு கத்தாதீர்கள். குடும்பத் தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கடினமான காரியங்களையும் எளிதாக […]
பலத்த பாதுகாப்புடன் – நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடும் பாதுகாப்புடன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், இன்று 900 நாள்களை எட்டியுள்ளமையை முன்னிட்டு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கண்டிவீதி வழியாக ஊர்வலமாகச் சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து, அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தைச் சென்றடைந்தனர். ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.





