மஹிந்த அணியான பொது எதிரணிக்கு நேரடியாகத் தமது ஆதரவை வழங்கிவரும் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டிருந்த சூழலில் மேலும் சிலரின் பதவிகள் விரைவில் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கடந்த வியாழக்கிழமை மத்துகம மற்றும் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்களாக இருந்த குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகேவின் பதவிகள் பறிக்கப்பட்டு குறித்த தொகுதிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, அத்தனகல தொகுதியின் புதிய அமைப்பாளராக […]
Other News
அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு உடன் தீர்வு வழங்குக! – பிரதமரை வலியுறுத்துகிறார் சி.வை.பி.ராம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்துகின்றார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வவுனியா மேல்நீதிமன்றத்தில் நான்கு வருடங்களாக இடம்பெற்ற தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் […]
உதயநிதியுடன் ஜோடி சேரும் மாதவன் பட நாயகி?
மாதவன் நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்குப் பிறகு உதயநிதி ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்து வந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். கவுரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசையை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். விரைவில் […]
அஜித் மகளின் அதிர்ச்சி செயல்…
நடிகர் அஜித்தின் மகள் தனது மாடர்ன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. என்னை அறிந்தால் படத்தில் வயதுக்கு மீறின ஒரு புரிதலோடு அஜித்திற்கு மகளாக நடித்து ஒரு இயல்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி மக்களிடமும், சினிமாவிலும் பிரபலமானவர் பேபி அனிகா. இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் போட்டு தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாய் வளம் வந்து கொண்டிருந்த அனிகா […]
நான் தீபாவளி கொண்டாடமாட்டேன்
அடுத்த வாரம் இந்தியாவே தீபாவளி கொண்டாடும், ஆனால் நடிகை ஓவியா கொண்டாடமாட்டாராம். அது ஏன் என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “எனக்கு எல்லா நாளுமே தீபாவளிதான், எல்லா நேரத்தையும் நான் கொண்டாடி கொண்டு தான் இருக்குறேன். ஒரு நாளை அதற்கென ஒதுக்கிவைத்து செய்வதில்லை” என ஓவியா தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்தியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி!
இந்தியா – இலங்கை இராணுவத்தினர் எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். பூனேயில் நடைபெறும் இக்கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இன்றைய தினம் இலங்கையிலிருந்து இராணுவக் குழாமொன்று இந்தியா சென்றுள்ளது. எதிர்க்கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கான கூட்டு மூலோபாயங்களை உருவாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது அளிக்கப்படவுள்ளன. இரு நாடுகளிலும் இராணுவ நடைமுறைகளை சிறந்த முறையில் பரிமாறி, இரு இராணுவங்களுக்கிடையே ஒரு […]
உணவு ஒவ்வாமை காரணமாக 200 பேர் கண்டி வைத்தியசாலையில்!
கண்டி, ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, இன்று காலை கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னரே, இவ்வாறு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Loading…
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க! – மைத்திரிக்கு சம்பந்தன் அவசர கடிதம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மேலும் தாமதமின்றி உடன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவசர கடிதம் எழுதியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பிலும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் […]
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்: பதிலைத் தந்துவிட்டு யாழ்ப்பாணம் வருக!
“உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அவற்றைப் புறந்தள்ள முடியாது. நாளைமறுதினம் சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வர இருக்கின்றார். அவர் தனது வருகைக்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல ஒரு பதிலைத் தரவேண்டும். பதிலைத் தந்துவிட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும். இதுவே யாழ்ப்பாண ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.” – இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட வணிகர் கழகம் தெரிவித்தது. இது தொடர்பில் […]
யாழ்ப்பாணம், மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியா நுளம்பு!
மன்னார், யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி பவானி தெரிவித்தார். மலேரியா நுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தலைமன்னாரில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் நுளம்புக் குடம்பிகள், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 19 கிணறுகளில் சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை வவுனியா […]





