Other News

பிஞ்சு குழந்தைகளின் இறப்பு , அரசிடம் கோரிக்கை வைத்த கமல் !

கமல்ஹாசன் சமீபகாலமாக சினிமாவை தாண்டி மக்களின் நலனை நோக்கி நகர தொடங்கியுள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது தமிழக அரசியலை பற்றியும் தன்னுடைய பார்வைகளை ட்வீட் செய்து வந்தார், விரைவில் அவர் அரசியல் காட்சி தொடங்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் இன்று பலத்த மழை காரணமாக கொடுங்கையுூரில் இரண்டு பிஞ்சு குழந்தைகள் மீன் கம்பியில் கால்வைத்து இறந்துள்ளனர். இது தமிழக அரசின் அலட்சிய போக்கு என்று மக்கள் குறை கூறி […]

அரசுக்கும், மக்களுக்கும் உலகநாயகன் கொடுத்த முன்னெச்சரிக்கை

நடிகராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்கு அச்சாரமாக சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தார். தற்போது டிவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை முன்னறிவிப்பாக அரசுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகள் மூழ்கவிருக்கின்றது இதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது அரசுக்கும் மக்களுக்கும் […]

​மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..!

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை திறக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனை காண ரசிகர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் சாலையில், நடிகர் சூரி தமது சகோதரருக்காக புதிய உணவகத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இந்த உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வர உள்ளதாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிவகார்த்திகேயனைக் […]

ஆயுள் தண்டனை

தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்ரூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட கால விசாரணைகளையடுத்தே உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இத்தீர்ப்பை வழங்கினார். சுனில் அப்ரூ 2003ஆம் ஆண்டு தெஹிவளை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது தரப்பில் வழக்குப் பதியப்பட்டதுடன், குற்றவாளியே இக்கொலையின் சூத்திரதாரி என்பதையும் […]

சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது

பாஜகவைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்மு காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும், இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இதுவரை, இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் இந்த 7 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு […]

நியூயார்க் பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு முழு உதவியை செய்வோம் என உஸ்பெகிஸ்தான் உறுதியளித்து உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி டிராக்டர் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகினர். தாக்குதலில் காயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க போலீஸ் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு முழு உதவியை வழங்குவோம் என உஸ்பெகிஸ்தான் உறுதியளித்து உள்ளது. “பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் […]

வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இன்று 11.30 மணியளவில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ராஜ்மோகன் என்பவர் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பேருந்தில் 3 கிலோ 610 கிராம் கேரளா கஞ்சாவினை தனது பயணப்பொதியில் மறைத்து எடுத்துச் சென்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். போதை ஒழிப்பு பிரிவினர் வவுனியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்தில் சோதனை […]

நியூயோர்க்கில் தீவிரவாதத் தாக்குதலில் 8 பேர் பலி

நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நியூயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதை மற்றும் பாதசாரிகளுக்கான பாதைக்குள் திடீரென பிரவேசித்த டிரக் வண்டியொன்று அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த டிரக் வண்டியை செலுத்தி தீவிரவாதத் தாககுதலில் இடுபட்ட 29 வயதான நபர் நியூயோர்க் நகர பொலிஸாரால் சுடப்பட்ட […]