Other News

சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்)

சின்னம்மா நல்லதம்பி (அப்பச்சியர்) புங்­கு­டு­தீவு 3ஆம் வட்­டா­ரத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சின்­னம்மா நல்­ல­தம்பி 10.11.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­ப­திப்­பிள்ளை தங்­கம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும் சின்­னையா பாக்­கி­ய­லட்­சுமி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்ற நல்­ல­தம்­பி­யின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கன­க­சுந்­த­ரம் முத்­துத்­தம்பி மற்­றும் ஐயம்­பிள்ளை காலஞ்­சென்ற சுப்­பி­ர­ம­ணி­யம் (சாரதி – -C.T.B) மற்­றும் மாணிக்­க­வா­ச­கர், கன­க­ரெத்­தி­னம்(சுவிஸ்), பத்­ம­நா­தன், வர­த­லெட்­சுமி, பத்­மா­வதி காலஞ்­சென்ற இரத்­தி­ன­சிங்­கம் ஆகி­யோ­ரின் […]

சோமசுந்தரம் சண்முகரத்தினம்

சோமசுந்தரம் சண்முகரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர், யா /வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், சமாதான நீதிவான் , தலைவர், கீரிப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபை) On Nov 12, 2017 வேலணை கிழக்கு, ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், 145 /4 , பிரப்பங்குளம் ஒழுங்கை நாவலர் வீதி , யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சி்ன்னத்தம்பி சோமசுந்தரம் சண்முகரத்தினம் நேற்று (11.11.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் — சின்னத்தங்கம் தம்பதியரின் […]

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமை குறிவைத்து இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று தலிபான்கள் உட்பட இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.ஐந்து இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவ முகாமிற்குள் நுழைய நினைத்த மூன்று தலிபான்களை கண்டறிந்த ஒரு இராணுவ வீரர் அதில் ஒரு தலிபான் தீவிரவாதியை சுட்டுள்ளார். ஆனால் மீதமிருந்த இரண்டு தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்த […]

சோப்பு போட்டு குளித்தால் 6 மாதங்கள் ஜெயில்!

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கிருக்கும் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, சியக்காய் போன்றவற்றை பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் குளிக்கும் போது, சோப்பு, ஷாம்பு, சியக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். சிலர் சாப்பிட்ட இலைகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் அசுத்தம் அதிகரிக்கிறது. ஆறு அசுத்தமாவதைத் தடுக்கும் வகையில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சியக்காய் ஆகிய பொருட்களை குளிக்க […]

மன்னிப்பு கேட்க தயக்கமா? வந்தாச்சு SORRY ஆப்!!

இணையதள வளர்ச்சி சர்வதேச வளர்ச்சியை அடைந்துள்ளது. நமது அன்றாட பணியை எளிமையாக்க தினமும் பல ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மன்னிப்பு கேட்ட புதிய ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்படயுள்ளது. Greta Van Susteren என்பவர் இந்த ஆப்பை வெளியிட உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். SORRY என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் Accept மற்றும் Reject என இரு வசதிகளை மட்டுமே கொண்டது. ஒருவர் நம்மிடம் […]

ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் வாழ்க்கை முழுதும் மது இலவசம்!

ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் நீங்கள் வாழ்நாள் முழுதும் மது குடிக்கலாம். சீனாவில் ஷாங்காய் பகுதியில் நடைபெறும் வர்த்தக திருவிழாவை முன்னிட்டு பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம். இந்நிலையில் ஷியங் ஷியோ போல் என்ற மது கம்பெனி தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. இன்று ரூ,1 லட்சம் முன் பணம் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் மது வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை 99 […]

கேப்பாபுலவு காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும்!

இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தலைமைக் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, 133 ஏக்கர் காணியை இம்மாதம் […]

கடவுச்சீட்டு, ஆள் அடையாள அட்டை பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய அரசாங்க சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, தபால் கட்டணம், மிருகக்காட்சி சாலை கட்டணம், நீதிமன்ற சேவை கட்டணம் மற்றும் ஏனைய அனைத்து அரசாங்க சேவைகளின் கட்டணங்களும் நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. […]

வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா? வாயைப் பிளக்கும் தயாரிப்பாளர்கள்

அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாய்ப்புகள் குவிந்தாலும் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு, வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என தயாரிப்பாளர்கள் வாயைப் பிளக்கிறார்களாம். உச்ச நட்சத்திரத்துடன் ஜோடியாக நடித்தவர் இந்த மழை நடிகை. இந்த வருடம் வெளியான வம்பு நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது வில்லனாகக் கலக்கிவரும் சாமி நடிகர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்காக சமீபத்தில் தண்ணீருக்கும் நீச்சல் உடையுடன் இருக்கும் […]

மைத்திரி, மஹிந்த நேரடிப் பேச்சு! கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து மஹிந்தவும்,மைத்திரியும் நேரடியாகச் சந்தித்து பேசுவது நல்லது என்று பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பரஸ்பரம் தீர்மானம் ஒன்றை எடுத்ததை அடுத்தே இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் கொழும்பு […]