Other News

ஊழல் பிரதமர் மோடி

தீவிரவாதத்திற்கு எதிராக போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தது. மும்பை தீவிரவாத தாக்குதலின் 9வது நினைவு தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று பேசும்பொழுது, தீவிரவாதம் பற்றிய விவகாரத்தினை கடந்த 40 வருடங்களாக இந்தியா எழுப்பி வருகிறது என கூறினார். தொடக்கத்தில் இதனை உலக நாடுகள் கருத்தில் எடுத்து கொள்ளவில்லை. ஆனால், […]

துயர் துடைப்பு மையம்

துயர் துடைப்பு மையம் துயர் துடைப்பு மையம் என்று தினமும் ஒலி பரப்பாகின்றதே வானொலியில்……\ இதை எப்போது எங்கே துடைத்து எறிகின்றார்கள் கண் துடைப்பு வித்தை போல் ஆனது இத் திட்டம்…..\ ஆண்டுக்கு ஆண்டு தொடரும் தொடர் கதையாகப் போனது இந்த அவல நிலை….\ வானம் பொழிகின்றது பூமி நிறைந்து வளிகின்றது வெள்ளத்தால் ஆண்டில் ஒரு தடவையாவது பரிதாப நிலையில் குடிசை வாசிகள்……\ பாது காப்பு என்னும் பெயரில் கூட்டிக் […]

வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! ஒட்டிய வயிறுடனே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படகோட்டி வலை வீசப் போனவரே …! நடுக் கடலிலே துணைக் கரம் இன்றி துட்டுக்காக தத்தளித்த படி கூடையை நிறப்ப வலை வீசப் போனவரே …! குப்பத்துச் சேவல் கூவிடிச்சு பக்கத்து ராமன் வீடு வந்தாச்சு அள்ளி எடுத்த வலையோடு […]

பாகிஸ்தான் தலைநகரில் பதற்றம் ரப்பர் குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வார காலமாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு வந்தனர். இதனால் இஸ்லாமாபாத் முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன. இதன்காரணமாக நேற்று […]

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மாலியில் 2013-ம் ஆண்டில் இருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாலி மக்களை காப்பதிலும், அமைதி நிலவச்செய்வதிலும் அங்குள்ள ஐ.நா. அமைதிப்படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை அங்கு அமைதிப்படை வீரர்கள் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு நைஜர் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ள மெனாகா மற்றும் மோப்தி ஆகிய […]

எகிப்தில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு ஆயுதக்கிடங்குகள் அழிப்பு

எகிப்தில் மசூதி தாக்குதலுக்கு விமானப்படை பதிலடி கொடுக்கும் விதமாக வான்தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. எகிப்து நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் இயங்கிக்கொண்டு, நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில், அங்கு சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள பீர் அல் அபெத் நகரில் அல் ராவ்டா […]

ஐரோப்பா மிரட்டினால் ராக்கெட் வீச்சின் எல்லை அதிகரிக்கப்படும்

ஈரான் நாட்டில் தயாரிக்கப்படும் ராக்கெட் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது. இதனால் 2 ஆயிரம் கி.மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த வகை ராக்கெட்டுகள் உள்ளன. இந்த நிலையில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் துணை தலைவரான சலாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள் ராக்கெட்டுகளின் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது என்றால் அது தொழில்நுட்ப பற்றாக்குறையினால் அல்ல. நாங்கள் ராணுவ கொள்கையினை […]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்

ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணியினர் கோரியிருந்தனர். இந்நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு […]

34 கிலோ போதைப்பொருளுடன் தலைமன்னார்வாசி கைது

தலைமன்னாரில், ஹாஷிஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 34 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமன்னாரின் உருமலை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது நபர் என்றும் தலைமன்னாரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் விசாரணை தொடர்கிறது.

புகையிரதத் திணைக்களத்தில் பெண்களுக்கு இடமில்லை!

புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் பெண்களை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்ட விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்றபோதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. வரவு-செலவுத் திட்டத்தைச் சார்ந்து, திணைக்களங்களின் செலவீனங்கள் குறித்த விவாதம் நேற்று பாராளுமன்றில் நடைபெற்றது. வெளிவிவகார, மூலோபாய அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் இதில் பிரதான அங்கம் வகித்தனர். இதன்போது, பல்வேறு சந்தர்ப்பங்களில் புகையிரதத் திணைக்களத்தில் தற்காலிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் […]