காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை விடுவித்து தருமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று ஒரு வருடத்தை கடந்துள்ளது. இதை முன்னிட்டே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், […]
Other News
மஹிந்தவின் கடும் எச்சரிக்கை! சம்பந்தனுக்கு ஆபத்து
நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டதொடரின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எதிர்க்கட்சி தலைமை பதவியை கோருகின்றோம். ரணில் தான் பிரதமராக இருப்பார் என நான் நினைக்கின்றேன். அது ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உள்ள கொடுக்கல் வாங்கலாகும். ஸ்ரீலங்கா […]
இன்றைய ராசிபலன் 20.02.2018
மேஷம்: நண்பகல் 12.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். […]
தினகரனின் குக்கரை தள்ளி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்!
ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. தற்போது உயர் நிதிமன்ரமும் தேதி குறிப்பிடாமல் குக்கர் வழக்கை தள்ளிவைத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை கேட்டு தேர்தல் கமிஷனை அனுகினார் தினகரன். ஆனால், குக்கர் சின்னம்தான் அவருக்கு கிடைத்தது. அதிமுகவின் மற்றொரு அணியாகவே செயல்படும் தினகரன், மக்கள் மத்தியில் பிரபலமான குக்கர் சின்னத்தை உள்ளாட்சி தேர்தலிலும் பெற வேண்டும் […]
பெண்களுக்கு இனி ஆண்கள் அனுமதி தேவை இல்லை
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது. அப்படி சமீபத்தில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாட்டை காண்போம்… சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர். சவுதி அரசின் பாதுகாப்பாளர் சட்டத்தின்படி, பெண் ஒருவர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால், தந்தை, சகோதரர் கணவர் ஆகியோரில் ஒருவரது அனுமதி […]
விடுதலை புலிகள் இல்லாததால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பேராபத்து! பழநெடுமாறன்
2009ஆம் அண்டு மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தார்கள். ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று சொன்னார்களே தவிற ஆயுதங்களை கீழே வைக்கின்றோம் என்று கூறவில்லை. என பழநெடுமாறன் தெரிவித்தார். மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் […]
ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்படுவார்கள்! மகிந்த அணி தெரிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த சில தினங்களாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஜனாதிபதியின் பலவீனம் காரணமாக சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக” […]
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய வேண்டுகோள்
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இவ்வாராம் நிறைவடையவுள்ளன. பாடசாலையின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைகின்றது. தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அறிவித்தல் விடுத்துள்ளார்.
அரசியலில் யாருக்கு சப்போர்ட் – கவுதமி பதில்
அரசியலில் ரஜினிக்கு சப்போர்ட் செய்வீர்களா அல்லது கமலுக்கு சப்போர்ட் செய்வீர்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் கவுதமி. கமல்ஹாசனுடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கவுதமி, சில காலங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், பல விஷயங்கள் பற்றியும் மனம் திறந்து தன்னுடைய கருத்துகளைக் கூறிவருகிறார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்த அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘ரஜினி, கமல்… அரசியலில் யாரை சப்போர்ட் செய்வீர்கள்?’ என்ற […]
அடுத்தடுத்து அதிரடி காட்டும் கமல்ஹாசன்
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவர் சந்தித்து பேசியுள்ளார். அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார். அந்நிலையில், அவர் பல முக்கிய நபர்களை சந்தித்து சில ஆலோசனைகளை கேட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்தில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை, அவரது இல்லத்திற்கு […]





