இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் அரச பேருந்து நிலயத்திற்க்கு முன் திடீர் என தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று புதன் கிழமை(16) காலை 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது. […]
Other News
மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையத்தில் சந்தேகதிற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீண்டும் அகழ்வு
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகம் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது. ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் […]
விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்…
சாலை விபத்தில் சிக்கி, ஆம்புலன்சுக்காக காத்திருந்த ஒரு பென்ணை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாகனத்தில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். இன்று முழுவதும் அவர் கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் […]
பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மதசார்பற்ற ஜனதா தளம் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு […]
விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு
விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் அபார வசூலை பெற்று வரும் இந்த படம் விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது. இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன […]
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை சரியாக […]
இன்றைய ராசிபலன் 16.05.2018
மேஷம்: இன்று பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம்: இன்று சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு […]
காவிரி விவகாரம் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை!
காவிரி விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறினார். காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் மக்களை சென்று சந்திக்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், மே 19-ஆம் தேதி விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், மக்கள் பிரச்னைக்காக […]
காவிரி வரைவு அறிக்கை தாக்கல்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் வரைவறிக்கையை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு அதனை எப்போது முழுமையாக நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களும் – காவிரி டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது, நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், முழுமையான அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட […]
மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு
மன்னார் நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில்; உள்ள காட்டு பகுதியில் இன்று காலை வணஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் உரிய அனுமதி இன்றி கற்றாலை சொடிகளை அகழ்வு செய்த மூவர் வங்காலை பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அப்பகுதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தாரபுரத்தை சேர்ந்த மூவரே குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் கற்றாலை பிட்டி காட்டு பகுதியில் இன்று காலை […]





